செய்திகள் :

ஆஸ்திரேலிய வீரர் பந்துவீச்சில் சந்தேகம்! தடைவிதிக்கப்படுமா?

post image

ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ குஹ்னேமன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் பந்துவீசுவதற்கு தடைவிதிக்கப்படுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரின் முதல் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வெல்லுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த மேத்யூ குஹ்னேமன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.

இடதுகை சுழற்பந்து வீச்சாளரான மேத்யூ குஹ்னேமன் இந்தத் தொடரில் மொத்தமாக 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர் மீது புகாரளிக்கப்பட்டுள்ளதால், அவரது பந்துவீச்சை சோதனைக்கு உள்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க...ஆர்சிபி புதிய கேப்டன் அறிவிப்பு!

2017 ஆம் ஆண்டு அறிமுகமான மேத்யூ குஹ்னேமன் இதுவரை 124 போட்டிகளில் விளையாடியுள்ளார். 5 டெஸ்ட், 4 ஒருநாள் மற்றும் பிக்பாஸ் தொடரில் 55 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

கிரிக்கெட் விதிகளின் படி, கிரிக்கெட் விதிகளின் படி, மேத்யூ குஹ்னேமன் பந்துவீசும் போது அவரது கை 15 டிகிரி அதிகமாக சுழல்வது சட்டத்திற்கு புறம்பாகப் பார்க்கப்படுகிறது. பந்துவீசும் போது அவரது கை 15 டிகிரி அதிகமாக சுழல்வது சட்டத்திற்கு புறம்பாகப் பார்க்கப்படுகிறது.

பிரிஸ்பேனில் உள்ள சோதனை மையத்தில் மேத்யூ குஹ்னேமன் பந்துவீச்சு சோதனைக்கு உள்படுத்தப்பட்டு பின்னர் ஐசிசிக்கு சமர்பிக்கப்படவுள்ளது. ஒருவேளை அவரது பந்துவீச்சில் சந்தேகம் ஏற்பட்டால், அவரது பந்துவீச்சில் மறுமதிப்பீடு செய்யும் வரை அவர் கிரிக்கெட்டில் இருந்து இடைநீக்கம் செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க...சேஸிங்கில் வரலாற்று சாதனை..! முத்தரப்பு தொடரில் இறுதிப் போட்டிக்கு தேர்வான பாகிஸ்தான்!

இந்திய அணியின் ஃபீல்டிங்கில் முழு திருப்தி..! பயிற்சியாளர் நெகிழ்ச்சி!

இந்திய அணியின் ஃபீல்டிங் சிறப்பாக இருப்பதாக ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் பேட்டியளித்துள்ளார். இங்கிலாந்து உடனான டி20 தொடரை இந்திய அணி 4-1 எனவும் ஒருநாள் தொடரை 3-0 எனவும் வென்று அசத்தியது. தொடரை வ... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது..! அசத்தும் ஷுப்மன் கில்!

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது பெறும் பட்டியலில் ரோஹித் சர்மாவுடன் இணைந்துள்ளார் ஷுப்மன் கில். 3ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 356 ரன்கள் குவித்தது. இதில் ... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்! ரோஹித்துக்கு சரிவு!

ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபிக்கு இன்னும் விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் 4-5 நாள்களே இருக்கும் நிலையில், இந்தியாவின் துணை கேப்டன் ஷுப... மேலும் பார்க்க

ஆர்சிபி புதிய கேப்டனுக்கு விராட் கோலி கூறியதென்ன?

ஆர்சிபியின் புதிய கேப்டன் ரஜத் படிதாருக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக என்ன நடந்தாலும் நாம் ரஜத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ரஜத் ப... மேலும் பார்க்க

ஆர்சிபி புதிய கேப்டன் அறிவிப்பு!

ஐபிஎல் 2025ஆம் ஆண்டுக்கான ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ஃபாப் டு பிளெஸ்ஸி கேப்டனாக செயல்பட்டார். அதற்கு முன்னதாக விராட் கோலி ஆர்சிபி அணியை வழிநடத்தி வந்தார். பயிற்சியா... மேலும் பார்க்க

சேஸிங்கில் வரலாற்று சாதனை..! முத்தரப்பு தொடரில் இறுதிப் போட்டிக்கு தேர்வான பாகிஸ்தான்!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தேர்வானது.பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் ப... மேலும் பார்க்க