செய்திகள் :

சேஸிங்கில் வரலாற்று சாதனை..! முத்தரப்பு தொடரில் இறுதிப் போட்டிக்கு தேர்வான பாகிஸ்தான்!

post image

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தேர்வானது.

பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் பிப்.8ஆம் தேதி தொடங்கியது.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் அதிகமாக வெற்றி பெறும் இரண்டு அணிகள் பிப்.14ஆம் தேதி இறுதிப் போட்டியில் விளையாடும் என திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.

தென்னாப்பிரிக்க அணி 2 போட்டிகளிலும் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறியது.

இந்தப் போட்டிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஒருநாள் போட்டியில் தெ.ஆ. அணி 352/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிளாசன் 87, பவுமா 82, ப்ரிட்ஸ்கி 83 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 355/4 எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் அதிகபட்ச சேஸிங் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தெ.ஆ. எதிராக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்ற வரலாற்று சாதனையும் இதன் மூலம் பாகிஸ்தான் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் அதிகபட்சமாக சல்மான் அஹா 134, முகமது ரிஸ்வான் 122 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். சல்மான் அஹா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அணியின் ஃபீல்டிங்கில் முழு திருப்தி..! பயிற்சியாளர் நெகிழ்ச்சி!

இந்திய அணியின் ஃபீல்டிங் சிறப்பாக இருப்பதாக ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் பேட்டியளித்துள்ளார். இங்கிலாந்து உடனான டி20 தொடரை இந்திய அணி 4-1 எனவும் ஒருநாள் தொடரை 3-0 எனவும் வென்று அசத்தியது. தொடரை வ... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது..! அசத்தும் ஷுப்மன் கில்!

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது பெறும் பட்டியலில் ரோஹித் சர்மாவுடன் இணைந்துள்ளார் ஷுப்மன் கில். 3ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 356 ரன்கள் குவித்தது. இதில் ... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்! ரோஹித்துக்கு சரிவு!

ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபிக்கு இன்னும் விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் 4-5 நாள்களே இருக்கும் நிலையில், இந்தியாவின் துணை கேப்டன் ஷுப... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய வீரர் பந்துவீச்சில் சந்தேகம்! தடைவிதிக்கப்படுமா?

ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ குஹ்னேமன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் பந்துவீசுவதற்கு தடைவிதிக்கப்படுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்க... மேலும் பார்க்க

ஆர்சிபி புதிய கேப்டனுக்கு விராட் கோலி கூறியதென்ன?

ஆர்சிபியின் புதிய கேப்டன் ரஜத் படிதாருக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக என்ன நடந்தாலும் நாம் ரஜத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ரஜத் ப... மேலும் பார்க்க

ஆர்சிபி புதிய கேப்டன் அறிவிப்பு!

ஐபிஎல் 2025ஆம் ஆண்டுக்கான ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ஃபாப் டு பிளெஸ்ஸி கேப்டனாக செயல்பட்டார். அதற்கு முன்னதாக விராட் கோலி ஆர்சிபி அணியை வழிநடத்தி வந்தார். பயிற்சியா... மேலும் பார்க்க