செய்திகள் :

ஆர்சிபி புதிய கேப்டனுக்கு விராட் கோலி கூறியதென்ன?

post image

ஆர்சிபியின் புதிய கேப்டன் ரஜத் படிதாருக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக என்ன நடந்தாலும் நாம் ரஜத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஜத் படிதார் அல்லது கோலி நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், புதிய கேப்டனாக ரஜத் படிதாரை ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்கு விராட் கோலி வாழ்த்திய விடியோவை ஆர்சிபி நிர்வாக வெளியிட்டுள்ளது. அதில் விராட் கோலி கூறியதாவது:

தகுதியானவர் ரஜத் படிதார்

ஆர்சிபியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள். ஆர்சிபி அணியில் நீங்கள் விளையாடிய விதம், வளர்ந்து வந்த விதம் எல்லாம் உங்களை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்தியா முழுவதுமுள்ள ஆர்சிபி ரசிகர்கள் உங்களது விளையாட்டை ரசித்துள்ளார்கள்.

மிகப்பெரிய பொறுப்பு

உங்களுக்கு உதவியாக நான் உள்பட ஆர்சிபி வீரர்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம். இது மிகப்பெரிய பொறுப்பு. நான் இதைப் பல ஆண்டுகளாக செய்து வந்துள்ளேன். ஃபாப் டு பிளெஸ்ஸி கடந்த சில வருடங்கள் செய்துள்ளார். தற்போது, இந்தப் பொறுப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது கௌரமாக கருதுகிறேன். உங்களுக்காக மகிழ்கிறேன் ரஜத். சரியான இடத்துக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். மேலும் நீங்கள் வலுவடைவீரகள் என நம்புகிறேன்.

கடந்த சில வருடங்களாக ரஜத் ஒரு வீரராக சிறப்பாக முன்னேறியுள்ளார். இந்திய அணிக்கும் விளையாடியுள்ளார். அவரது பேட்டிங் தரம் பல மடங்கு முன்னேறியுள்ளது. மாநில அணியையும் நன்றாக வழிநடத்தியுள்ளார்.

ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும்

ரஜத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு நான் ரசிகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் நல்லதாக நடக்க ரஜத்துக்கு வாழ்த்துகள். என்ன நடந்தாலும் ரசிகர்கள் ரஜத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஒரு அணியாக நாம் அவருடன் இருக்க வேண்டும். ரஜத்துடன் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் ஃபீல்டிங்கில் முழு திருப்தி..! பயிற்சியாளர் நெகிழ்ச்சி!

இந்திய அணியின் ஃபீல்டிங் சிறப்பாக இருப்பதாக ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் பேட்டியளித்துள்ளார். இங்கிலாந்து உடனான டி20 தொடரை இந்திய அணி 4-1 எனவும் ஒருநாள் தொடரை 3-0 எனவும் வென்று அசத்தியது. தொடரை வ... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது..! அசத்தும் ஷுப்மன் கில்!

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது பெறும் பட்டியலில் ரோஹித் சர்மாவுடன் இணைந்துள்ளார் ஷுப்மன் கில். 3ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 356 ரன்கள் குவித்தது. இதில் ... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்! ரோஹித்துக்கு சரிவு!

ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபிக்கு இன்னும் விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் 4-5 நாள்களே இருக்கும் நிலையில், இந்தியாவின் துணை கேப்டன் ஷுப... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய வீரர் பந்துவீச்சில் சந்தேகம்! தடைவிதிக்கப்படுமா?

ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ குஹ்னேமன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் பந்துவீசுவதற்கு தடைவிதிக்கப்படுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்க... மேலும் பார்க்க

ஆர்சிபி புதிய கேப்டன் அறிவிப்பு!

ஐபிஎல் 2025ஆம் ஆண்டுக்கான ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ஃபாப் டு பிளெஸ்ஸி கேப்டனாக செயல்பட்டார். அதற்கு முன்னதாக விராட் கோலி ஆர்சிபி அணியை வழிநடத்தி வந்தார். பயிற்சியா... மேலும் பார்க்க

சேஸிங்கில் வரலாற்று சாதனை..! முத்தரப்பு தொடரில் இறுதிப் போட்டிக்கு தேர்வான பாகிஸ்தான்!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தேர்வானது.பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் ப... மேலும் பார்க்க