செய்திகள் :

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது..! அசத்தும் ஷுப்மன் கில்!

post image

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது பெறும் பட்டியலில் ரோஹித் சர்மாவுடன் இணைந்துள்ளார் ஷுப்மன் கில்.

3ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 356 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக துணை கேப்டன் ஷுப்மன் கில் 112 ரன்கள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 3-0 என இந்திய அணி தொடரை வென்றது.

50 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 2,587 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் தொடர் நாயகன் விருதும் ஷுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது.

இந்தத் தொடரில் 87, 60, 112 என மூன்று போட்டிகளிலும் சேர்த்து 259 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார் ஷுப்மன் கில்.

இந்தியாவுக்காக அதிக முறை தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவுடன் சமன் செய்துள்ளார் ஷுப்மன் கில்.

டி20, டெஸ்ட்டில் சொதப்பினாலும் ஷுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாகவே விளையாடி வருகிறார்.

ஒருநாள் போட்டியில் அதிக முறை தொடர் நாயகன் வென்ற இந்தியர்கள்

1. சச்சின் டெண்டுல்கர் - 15

2. விராட் கோலி - 11

3. யுவராஜ் சிங் - 7

4. சௌரவ் கங்குலி, எம்.எஸ்.தோனி - 6

5.ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் - 5

ஆதரவும் எதிர்ப்பும்..! லபுஷேன் தொடர்ந்து விளையாடுவாரா?

ஆஸி. நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேனின் ஃபார்ம் குறித்து முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் கவலையளிப்பதாகப் பேசியுள்ளார்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் தேர்... மேலும் பார்க்க

இந்திய அணியின் ஃபீல்டிங்கில் முழு திருப்தி..! பயிற்சியாளர் நெகிழ்ச்சி!

இந்திய அணியின் ஃபீல்டிங் சிறப்பாக இருப்பதாக ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் பேட்டியளித்துள்ளார். இங்கிலாந்து உடனான டி20 தொடரை இந்திய அணி 4-1 எனவும் ஒருநாள் தொடரை 3-0 எனவும் வென்று அசத்தியது. தொடரை வ... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்! ரோஹித்துக்கு சரிவு!

ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபிக்கு இன்னும் விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் 4-5 நாள்களே இருக்கும் நிலையில், இந்தியாவின் துணை கேப்டன் ஷுப... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய வீரர் பந்துவீச்சில் சந்தேகம்! தடைவிதிக்கப்படுமா?

ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ குஹ்னேமன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் பந்துவீசுவதற்கு தடைவிதிக்கப்படுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்க... மேலும் பார்க்க

ஆர்சிபி புதிய கேப்டனுக்கு விராட் கோலி கூறியதென்ன?

ஆர்சிபியின் புதிய கேப்டன் ரஜத் படிதாருக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக என்ன நடந்தாலும் நாம் ரஜத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ரஜத் ப... மேலும் பார்க்க

ஆர்சிபி புதிய கேப்டன் அறிவிப்பு!

ஐபிஎல் 2025ஆம் ஆண்டுக்கான ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ஃபாப் டு பிளெஸ்ஸி கேப்டனாக செயல்பட்டார். அதற்கு முன்னதாக விராட் கோலி ஆர்சிபி அணியை வழிநடத்தி வந்தார். பயிற்சியா... மேலும் பார்க்க