செய்திகள் :

அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது: ஆர்.எஸ். பாரதி

post image

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது என்று சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறினார்.

சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ். பாரதியிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

தமிழகத்தில் பாஜக ஆட்சி மலர்ந்தே தீரும் என்று அண்ணாமலை கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு, அது அவரது கற்பனை என்று பதிலளித்தார் ஆர்.எஸ். பாரதி.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் திமுக குறித்துப் பேசுகையில், அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுத்துவிட்டுத்தான் போவேன் எனப் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அண்ணா அறிவாலயத்தில் இருக்கிற ஒரு புல்லைக் கூட அண்ணாமலையால் பிடுங்க முடியாது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் என்பது நிச்சயமாக ஒரு கற்பனை, அது நடக்கவே நடக்காது என்பது ஊரறிந்த உண்மை என்று பதிலளித்தார்.

முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதாக அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு, ஒரே மேடையில் விவாதிக்க நாங்கள் தயார். எங்களுடன் விவாதிக்க அண்ணாமலை தயாரா? என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதிமுகவைப் பற்றி கேட்க வேண்டாம். ஏனென்றால் அவர்களே பாவம் நெருக்கடியில் இருக்கிறார்கள். அதிமுகவில் இருக்கும் யாரைப் பற்றியும் நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை என்று கூறினார் ஆர்.எஸ். பாரதி.

அடுத்தடுத்த கேள்விகளுக்கு, ஸ்டிக்கர் ஒட்டியது யார் என்பது உங்களுங்ககேத் தெரியும். நடிகர் விஜய்க்கு 15 முதல் 20 சதவீத வாக்கு வங்கி இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

மேலும், பிரசாந்த் கிஷோர் பற்றி கேட்டதற்கு, பிரசாந்த் கிஷோரே பிகாரில் டெபாசிட் வாங்கவில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

பெண் நடத்துநருக்கான உயரம் குறைப்பு: போக்குவரத்துத் துறை

சென்னை; அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் குறைந்தபட்ச உயரம் 150 செ.மீ. ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.போக்குவரத்துத் துறை செயலர் க. பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசா... மேலும் பார்க்க

அடையாறு ஆற்றின் கீழ் மெட்ரோ சுரங்கம் தோண்டும் சவாலான பணி: முதல்வர் ஆய்வு

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் அடையாறு ஆற்றிற்கு கீழ் செல்லும் சவாலான வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தை கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையப் பகுதியில் சுரங்கம் தோண்டும் ... மேலும் பார்க்க

நெல்லை சிறுவனுக்கு என்ன நேர்ந்தது? அரசு மருத்துவமனை டீன் பதில்

நெல்லை: மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்தார்கள் என்ற தகவலில் உண்மையில்லை. 100 சதவீதம் சிறுவனை காப்பாற்ற முயன்றார்கள் என்று மருத்துவமனை டீன் ரேவதி பாலன் கூறியுள்ளார்.நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மரு... மேலும் பார்க்க

கழுத்தில் கட்டி: நெல்லை அரசு மருத்துவமனையில் சிறுவன் மரணம்! உறவினர்கள் போராட்டம்

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தென்காசியைச் சேர்ந்த சிறுவன் திடீரென உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் டீன் அலுவலகத்தை 2-வது நாளாக முற்றுகையிட்டு இன்று... மேலும் பார்க்க

திமுகவினர் அண்ணாமலையைப் போல இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல: சேகர்பாபு

சென்னை: அண்ணா அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாதவர் எப்படி செங்கல்லை பிடுங்க முடியும் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.திருவான்மியூரில் பாஜக... மேலும் பார்க்க

பர்கூர்: விவசாயியைத் தாக்கி 22 பவுன், ரூ.50,000 கொள்ளை! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

பர்கூர் அருகே வீட்டில் புகுந்து விவசாயியைத் தாக்கி, 22 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை... மேலும் பார்க்க