செய்திகள் :

திமுகவினர் அண்ணாமலையைப் போல இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல: சேகர்பாபு

post image

சென்னை: அண்ணா அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாதவர் எப்படி செங்கல்லை பிடுங்க முடியும் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

திருவான்மியூரில் பாஜகவின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல், தமிழக பாஜகவின் தலைவர் பதவியிலிருந்து செல்ல மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இதற்கு, ஏற்கனவே திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பதிலளித்திருந்த நிலையில், இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

சென்னை அம்பத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சேகர்பாபு, திமுக தொண்டர்கள் தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே வளர்ந்து தமிழ்நாட்டு அரசியலை கரைத்துக் குடித்தவர்கள்.

அண்ணாமலையை போல இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல. திமுகவின் ஆலயமாகக் கருதப்படும் அறிவாலயத்தை அண்ணாமலையால் தொட்டுக்கூட பார்க்க முடியாது. பிறகு அவரால் எப்படி செங்கல்லை பிடுங்க முடியும். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவை அசைத்துப் பார்க்க இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும்.

திமுகவை அழிக்கப் புறப்படுபவர்கள், தங்களின் அழிவுக்கு தொடக்கப் புள்ளி வைத்துக்கொள்கிறார்கள். இவர்களுக்கு பதிலடியாக 2026ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் திமுகவை மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள். அண்ணாமலை முதலில் தேர்தலில் போட்டியிட்டு ஒரு பேரவை உறுப்பினராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும், அவர் எங்கு போட்டியிட்டாலும் திமுகவின் கடைகோடி தொண்டனை நிற்க வைத்துக்கூட, முதல்வர் ஸ்டாலின் அண்ணாமலையை மண்ணைக் கவ்வ வைப்பார் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

பெண் நடத்துநருக்கான உயரம் குறைப்பு: போக்குவரத்துத் துறை

சென்னை; அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் குறைந்தபட்ச உயரம் 150 செ.மீ. ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.போக்குவரத்துத் துறை செயலர் க. பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசா... மேலும் பார்க்க

அடையாறு ஆற்றின் கீழ் மெட்ரோ சுரங்கம் தோண்டும் சவாலான பணி: முதல்வர் ஆய்வு

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் அடையாறு ஆற்றிற்கு கீழ் செல்லும் சவாலான வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தை கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையப் பகுதியில் சுரங்கம் தோண்டும் ... மேலும் பார்க்க

நெல்லை சிறுவனுக்கு என்ன நேர்ந்தது? அரசு மருத்துவமனை டீன் பதில்

நெல்லை: மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்தார்கள் என்ற தகவலில் உண்மையில்லை. 100 சதவீதம் சிறுவனை காப்பாற்ற முயன்றார்கள் என்று மருத்துவமனை டீன் ரேவதி பாலன் கூறியுள்ளார்.நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மரு... மேலும் பார்க்க

கழுத்தில் கட்டி: நெல்லை அரசு மருத்துவமனையில் சிறுவன் மரணம்! உறவினர்கள் போராட்டம்

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தென்காசியைச் சேர்ந்த சிறுவன் திடீரென உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் டீன் அலுவலகத்தை 2-வது நாளாக முற்றுகையிட்டு இன்று... மேலும் பார்க்க

அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது: ஆர்.எஸ். பாரதி

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது என்று சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறினார்.சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்... மேலும் பார்க்க

பர்கூர்: விவசாயியைத் தாக்கி 22 பவுன், ரூ.50,000 கொள்ளை! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

பர்கூர் அருகே வீட்டில் புகுந்து விவசாயியைத் தாக்கி, 22 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை... மேலும் பார்க்க