செய்திகள் :

அடையாறு ஆற்றின் கீழ் மெட்ரோ சுரங்கம் தோண்டும் சவாலான பணி: முதல்வர் ஆய்வு

post image

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் அடையாறு ஆற்றிற்கு கீழ் செல்லும் சவாலான வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தை கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையப் பகுதியில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெளிவரும் பணியினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணியின் கீழ், கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான சுரங்க வழித்தடப் பகுதியில் கிரீன்வேஸ் மெட்ரோ நிலையம் முதல் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் வரையிலான பணியில், 300 மீட்டர் அடையாறு ஆற்றிற்கு கீழ் செல்லும் சவாலான வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தை கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெளிவரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக அரசால் 2007-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களால் 2009-ஆம் ஆண்டு ஜுன் மாதம் பணிகள் தொடங்கப்பட்ட 54.1 கி.மீ நீளத்திலான சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்–I இன் இரண்டு வழித்தடங்களில் முழுமையாக பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் நாளொன்றிற்கு சராசரியாக 3.1 இலட்சத்திற்கும் மேல் பயணம் செய்து வருகின்றார்கள்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை மெட்ரோ இரயில் கட்டம்-II-இன் கட்டுமானப் பணிகள், 3 வழித்தடங்களில், 118.9 கி.மீ நீளத்தில் 128 இரயில் நிலையங்களுடன் 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

இப்பணிக்காக 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, கட்டம்- II-இல் மொத்தம் 42.6 கி.மீ நீளத்திலான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வழித்தடம் 3-இல் மட்டும் 26.7 கி.மீ நீளத்தில் மாதவரம் – கெல்லீஸ் மற்றும் கெல்லீஸ் –தரமணி ஆகிய இரண்டு பகுதிகளாக சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இரண்டாவது பகுதியான கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான சுரங்க வழித்தடப் பகுதியில் கிரீன்வேஸ் மெட்ரோ நிலையம் முதல் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை வருகிறது.

பல்வேறு விதமான மண் தன்மைகள், கடினமான பாறைகள், அதிநீரோட்ட பகுதிகள் மற்றும் நகர்புறத்திற்கென இடர்பாடுகள் ஆகிய சிக்கலான சவால்களை வெற்றிகரமாக சந்தித்து, அடையாறு என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஜுன் 2023-இல் சுரங்கம் தோண்டும் பணிகளை கிரீன்வேஸ் சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கி, அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையத்திற்கு அருகில், அடையாறு ஆற்றின் கீழ் சுமார் 40 முதல் 50 அடி ஆழத்தில் 300 மீட்டர் நீளத்திற்கு அடையாறு ஆற்றிற்கு கீழ் செல்லும் வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தை கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் வெளி வந்தது.

செப்டம்பர் 2024-இல் காவேரி என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், டவுன்லைன் சுரங்கம் தோண்டும் பணியினை முடித்துள்ளது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் வெளிவந்தது. இந்த முக்கியமான பணியினை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, இப்பணிகள் அனைத்தையும் உரிய காலத்தில் முடித்திட வேண்டும் என்று அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

அமைச்சர்களின் துறை மாற்றம்! பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு!

தமிழக அமைச்சரவையில் சிறியளவில் மாற்றம் செய்யப்பட்டு அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி, கிராம தொழில்கள் துறை பறிக்கப்பட்டு அமைச... மேலும் பார்க்க

பெண் நடத்துநருக்கான உயரம் குறைப்பு: போக்குவரத்துத் துறை

சென்னை; அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் குறைந்தபட்ச உயரம் 150 செ.மீ. ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.போக்குவரத்துத் துறை செயலர் க. பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசா... மேலும் பார்க்க

நெல்லை சிறுவனுக்கு என்ன நேர்ந்தது? அரசு மருத்துவமனை டீன் பதில்

நெல்லை: மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்தார்கள் என்ற தகவலில் உண்மையில்லை. 100 சதவீதம் சிறுவனை காப்பாற்ற முயன்றார்கள் என்று மருத்துவமனை டீன் ரேவதி பாலன் கூறியுள்ளார்.நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மரு... மேலும் பார்க்க

கழுத்தில் கட்டி: நெல்லை அரசு மருத்துவமனையில் சிறுவன் மரணம்! உறவினர்கள் போராட்டம்

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தென்காசியைச் சேர்ந்த சிறுவன் திடீரென உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் டீன் அலுவலகத்தை 2-வது நாளாக முற்றுகையிட்டு இன்று... மேலும் பார்க்க

திமுகவினர் அண்ணாமலையைப் போல இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல: சேகர்பாபு

சென்னை: அண்ணா அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாதவர் எப்படி செங்கல்லை பிடுங்க முடியும் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.திருவான்மியூரில் பாஜக... மேலும் பார்க்க

அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது: ஆர்.எஸ். பாரதி

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது என்று சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறினார்.சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்... மேலும் பார்க்க