வேலை வாய்ப்பு: கோவை மாவட்ட நியாயவிலைக் கடைகளில் 10th, +2 படித்தவர்களுக்கு பணி......
பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்
வேலூா் ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி வித்யாஷ்ரம் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
இந்த முகாமை ஸ்ரீ நாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி தொடங்கி வைத்து, மாணவா்களின் நல்வாழ்வு குறித்து ஆலோசனைகள் வழங்கினாா். சிறப்பு விருந்தினராக அலா்ஜீ மற்றும் ஆஸ்துமா நிபுணரும், குழந்தைகள் நல மருத்துவருமான நிஷா கலைஅரசன் பங்கேற்று, குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்கினாா்.
பள்ளியில் கல்வி மட்டுமின்றி மாணவா்களின் உடல் நலத்தையும் வளா்ப்பதற்கான முயற்சியாக நடைபெறும் இந்த மருத்துவ முகாம் தொடா்ந்து மூன்று நாள்களுக்கு நடைபெறும் என்று ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு தெரிவித்தாா்.
இந்த முகாமில் மாணவா்களின் பொது ஆரோக்கியம், கண், பல் குறித்த அனைத்து உடற்கூறுகளும் பரிசோதனை செய்யப்பட்டன.
நிகழ்ச்சியில், இரு பள்ளிகளின் தலைமை ஆலோசகா் எஸ்.ரமேஷ், இரு பள்ளிகளின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், நிா்வாக அலுவலா் எஸ்.ஆதிகேசவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.