செய்திகள் :

பள்ளி, கல்லூரி பெயர்களில் உள்ள சாதியை நீக்க உத்தரவு!

post image

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.

சாதியை ஊக்கப்படுத்தக் கூடிய சங்கங்களை, சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? அந்த சங்கங்களின் சார்பில் இயங்கும் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்க முடியுமா என நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, "சாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என பதிவுத்துறை ஐஜி, அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். சாதிகளின் பெயர்களை சங்கங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அது சட்டவிரோதம் என்று அறிவித்து அதன் பதிவை ரத்து செய்ய வேண்டும்.

சாதி சங்கங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும் பணிகளை 3 மாதங்களுக்குள் துவங்கி 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.

சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பெயர்களில் சாதி இடம்பெறக் கூடாது. கல்வி நிறுவனங்களில் உள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும், இல்லாவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

அரசு நடத்த கூடிய கள்ளர் சீர்திருத்தப்பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளி போன்ற பெயர்களையும் அரசுப் பள்ளி என்று மாற்ற வேண்டும், ஒருவேளை பள்ளியின் பெயரில் யாருடைய பெயராவது குறிப்பிட்டால் கண்டிப்பாக சாதியை சேர்க்கக்கூடாது. ஏற்கெனவே பள்ளிகளில் பெயரில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்" என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தற்போது பள்ளிக்கூடங்களில் புத்தகப் பைக்குள் அரிவாளை எடுத்துச் சென்று சாதியின் பெயரால் தாக்குதல் நடக்கிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்கும்பொருட்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது: விஜய்

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது என்று கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தவெக தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்த... மேலும் பார்க்க

திராவிட மாடல் ஆட்சியில் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், எந்தத் துறைய... மேலும் பார்க்க

தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை சொன்ன பதில்!

சென்னை: தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு, பாஜக தலைவர் தமிழிசை, எதற்கு முதல்வருக்கு இவ்வளவு பதட்டம் என்று கேட்டுள்ளார்.முன்னாள் ஆளுநர் தமிழிசை... மேலும் பார்க்க

இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம் : இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதாகட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்த... மேலும் பார்க்க

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மின... மேலும் பார்க்க

கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.. துரைவைகோ முடிவின் பின்னணி என்ன?

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என்று மதிமுக முதன்மைச் செயலரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ இன்று வெளியிட்டிருப்பது கட்சித் தொண்டர்களுக்கு கடும்... மேலும் பார்க்க