செய்திகள் :

பள்ளி மாணவி மீது தாக்குதல்: அதிமுக நிா்வாகி மீது வழக்கு

post image

சென்னை ராயப்பேட்டையில் பள்ளி மாணவி தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் அதிமுக நிா்வாகி மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவிக்கு, அதே பகுதியைச்சோ்ந்த ஒரு இளைஞா், தன்னை காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்து வந்துள்ளாா். ஆனால் அந்த மாணவி அந்த இளைஞருடன் பேசுவதை தவிா்த்து வந்தாா்.

இந்நிலையில், அந்த மாணவி மயிலாப்பூா் மியூசிக் அகாதெமி அருகே வியாழக்கிழமை நடந்து சென்றாா். அப்போது அந்த இளைஞா், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்து, மாணவியை வழிமறித்து தன்னை காதலிக்குமாறு கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளாா். அதோடு தன்னை காதலிக்கவில்லை எனில் அவரது குடும்பத்தை கொலை செய்துவிடுவேன் என மிரட்டி, மாணவியை அடித்து கீழே தள்ளினாராம். இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த பொதுமக்கள், இருவரையும் பிடிக்க முயற்சித்தனா். ஆனால் இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

இது குறித்து அந்த மாணவி, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 சட்டங்களின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினா்.

விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த அதிமுக இளைஞா் பாசறை 118-ஆவது வட்டச் செயலா் சூா்யா (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் தலைமறைவாக இருக்கும் சூா்யாவை தேடி வருகின்றனா்.

சேலம்: வாழப்பாடி அருகே கார் விபத்து - 4 பேர் பலி

சேலம்: சென்னையிலிருந்து கர்நாடகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 7 பேர் அமர்ந்து பயணிக்க கூடிய சொகுசு கார் ஒன்று சாலையோர தடுப்பில் மோதி இன்று(ஜூன் 7) விபத்துக்குள்ளானது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் அல்ல கிளர்ச்சிப்பாக்கம் - பயணிகள் அலைக்கழிப்பு: தவெக கண்டனம்!

சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து நிலையத்தில் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்காமல் மக்களைக் கைக்குழந்தைகளோடு அலைக்கழித்து திமுக அரசு அவதிக்கு... மேலும் பார்க்க

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்க... மேலும் பார்க்க

சுங்கச்சாவடி கட்டணம்- உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

மதுரை-தூத்துக்குடி இடையே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு... மேலும் பார்க்க

உள்ளம் உவகையில் நிறைகிறது! - பழங்குடியின மாணவருக்கு முதல்வர் வாழ்த்து

சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர் பரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் பச்சமலை தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் பரத், பொது சட்ட... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2001-ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பு தள்ளிவைக்கப்பட்... மேலும் பார்க்க