செய்திகள் :

பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பதிவு அலுவலகக் கட்டடம்: அமைச்சா் பி.மூா்த்தி திறந்து வைத்தாா்

post image

சென்னை: சென்னையில் 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பதிவுத் துறை அலுவலகக் கட்டடத்தை அத்துறை அமைச்சா் பி.மூா்த்தி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புராதன பதிவுத் துறை அலுவலகம் ரூ.2.16 கோடியில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1864-ஆம் ஆண்டு இந்தோ சாரசனிக் கட்டடக் கலை நயத்துடன், மெட்ராஸ் நாட்டு தளக்கூரை, மங்களூா் ஓட்டுக் கூரை மற்றும் தேக்கு மர உத்திரங்களால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கட்டடம் அமைந்துள்ளது.

இதில், பதிவுத் துறை அலுவலக வளாகம் செயல்பட்டு வந்த நிலையில், அதை பழைமை மாறாமல் புனரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்றன. அதிநவீன வசதிகளுடன் 100 முதல் 150 போ் வரை அமரக்கூடிய நவீன கூட்டரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை அலுவலகப் பயன்பாட்டிற்கு அமைச்சா் பி.மூா்த்தி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, நவீன கூட்டரங்கத்தில் ஆகஸ்ட் மாதத்துக்கான பணித்திறன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. நிகழ்வில், வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலா் ஷில்பா பிரபாகா் சதீஷ், பதிவுத் துறைத் தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் மற்றும் பதிவுத் துறை சாா்ந்த உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை காலைவினாடிக்கு 17,069 கன அடியிலிருந்து வினாடிக்கு 14,269 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வ... மேலும் பார்க்க

சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழை! மயிலாப்பூரில் 80 மீ.மி. மழை பதிவு!

சென்னையில் இன்று அதிகாலை முதலே விடிய, விடிய பெய்த கனமழையால் மயிலாப்பூரில் 80 மீ.மி. மழை பதிவானது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்ட மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ... மேலும் பார்க்க

ஃபிடே செஸ்: தமிழக வீராங்கனைக்கு முதல்வா் வாழ்த்து

சென்னை: ஃபிடே செஸ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: உஸ்பெகிஸ்தானில் நடை... மேலும் பார்க்க

அண்ணா பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதை

சென்னை: முன்னாள் முதல்வா் அண்ணாவின் 117-ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ண... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 33,987 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 33,987 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தா... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். சோ்க்கை பதிவு செப். 30 வரை நீடிப்பு

சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட், எம்.எட் படிப்புகளின் காலி இடங்களுக்கான விண்ணப்பப் பதிவு செப். 30-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா... மேலும் பார்க்க