செய்திகள் :

அதிமுக வாக்குகள் விஜய்க்கு போகாது: டி.ஜெயக்குமாா்

post image

சென்னை: எம்ஜிஆா் படத்தைப்பயன்படுத்தினாலும்,அதிமுக வாக்குகள் விஜய்க்கு போகாது என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் விவகாரம் குறித்து அதிமுக பொதுச் செயலா்தான் முடிவு செய்ய வேண்டும். அண்ணா, எம்ஜிஆா் ஆகியோா் உலகம் முழுவதும் தவிா்க்க முடியாத மாபெரும் சக்திகள்.

எங்கள் தலைவா்களின் படங்களை தவெக கட்சியினா் பயன்படுத்துவது வரவேற்புக்குரியது. அண்ணாவை வணங்கட்டும்; போற்றட்டும்.

அவா்களது படங்களை வைப்பதால், அதிமுக வாக்குகள் விஜய் பெற்றுவிட முடியாது. அதிமுக வாக்குகள் தமது கட்சிக்கு கிடைக்கும் என விஜய் நினைத்தால், அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்.

சென்னையில் அக்டோபா், நவம்பரில் பலத்த மழை இருக்கும் என்று கூறுகின்றனா். நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, பெரு மழைக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல், கரூரில் நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக உள்ளாா்.

தமிழகத்தின் கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தாமல் திமுக அரசு தோல்வியைத் தழுவி வருகிறது என்றாா்.

செல்லாக்காசுகளின் சலசலப்பு அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது: ஆர்.பி. உதயகுமார்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அதிமுகவுக்கு, சில செல்லாக்காசுகள் சலசலப்பு ஏற்படுத்தினாலும், எந்த பின்னடையும் ஏற்படுத்தாது என்று முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பா... மேலும் பார்க்க

தன்மானம்தான் முக்கியம் என்றால் தில்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!

தன்மானம்தான் முக்கியம் என்றால் எடப்பாடி பழனிசாமி தில்லிக்குச் சென்றது ஏன்? என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு... மேலும் பார்க்க

சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு!

சென்னையில் இன்று(செப். 16) அதிகாலை பெய்த திடீர் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே விடிய, விடிய பெய்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டதால... மேலும் பார்க்க

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் சடலம்! கொலையா? தற்கொலையா?

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை உயர்நிலை மேம்பாலத்திற்கு கீழே இளைஞர் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர்நிலை மேம்பாலத்திற்குக் கீழே வாலிபர் ஒ... மேலும் பார்க்க

எழுத்தாளர் கி.ரா. பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கோவில்பட்டி: சாகித்திய அகாதெமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி.ரா. பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்... மேலும் பார்க்க

புதிய உச்சத்தில் ரூ.83,000-ஐ நெருங்கிய தங்கம்! எகிறும் வெள்ளி விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.16) அதிரடியாக சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது.உலகளவிலான பொருளாதார நிச்சயமற்றத் தன்மை, அமெரிக்காவின் வர்த்தக போரால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ... மேலும் பார்க்க