செய்திகள் :

"பாகிஸ்தானை சீர்குலைக்க தீவிரவாதத்தை ஆயுதமாக இந்தியா பயன்படுத்துகிறது"- பாகிஸ்தான் ராணுவ தளபதி

post image

கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் மோதல்களில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில், கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த கிரிக்கெட் வீரர்கள்...
உயிரிழந்த கிரிக்கெட் வீரர்கள்...

இந்நிலையில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வாவின் அபோட்டாபாத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நேற்று(அக்.18) நடைபெற்ற ராணுவ வீரர்களின் பட்டமளிப்பு விழாவில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி சையது அசிம் முனீர் உரையாற்றி இருக்கிறார்.

அப்போது இந்தியாவுடனான சமீபத்திய ராணுவ மோதலை குறிப்பிட்டு பேசிய அவர், " அணுசக்தி மயமாக்கப்பட்ட சூழலில் போருக்கு இடமில்லை என்று இந்தியாவின் ராணுவத் தலைமைக்கு நான் அறிவுறுத்துகிறேன், உறுதியாக எச்சரிக்கிறேன்.

எங்களை ஒருபோதும் மிரட்ட முடியாது. சொல்லாட்சிகளால் வற்புறுத்த முடியாது.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

பாகிஸ்தானை சீர்குலைக்க தீவிரவாதத்தை ஒரு ஆயுதமாக இந்தியா பயன்படுத்துகிறது. ஒரு சில தீவிரவாதிகளால் பாகிஸ்தானுக்கு தீங்கு விளைவிக்க முடியாது.

ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தும் அனைத்து தீவிரவாதிகளும் ஒழிக்கப்படுவார்கள்.

காஷ்மீர் பிரச்னையை சர்வதேச விதிமுறைகளின்படி தீர்க்க வேண்டும். பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடாகும்" என்று பேசியிருக்கிறார்.

"இந்து அல்லாதோர் வீட்டுக்குச் சென்றால் பெண்களின் காலை உடையுங்கள்" - பாஜக Ex. MP பேச்சால் சர்ச்சை

மத்திய பிரதேசம் மாநிலத்தின், முன்னாள் போபால் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. அவர் பெற்றோர்கள், தங்கள் மகள்கள் இந்து அல்லாதோர் வீடுகளுக்கு... மேலும் பார்க்க

``100 மாவட்டங்களில் நக்சல்கள் அழிக்கப்பட்டுள்ளனர்'' - பிரதமர் மோடியின் தீபாவளி உரை!

கோவாவில் உள்ள கடற்படைத் தளத்தில் ராணுவ வீரர்கள்களுடன் தீபாவளி கொண்டாடினார் பிரதமர் மோடி. ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற இந்தியாவில் உருவாக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ம... மேலும் பார்க்க

``ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்தால் கூடுதல் வரி விதிப்போம்" - மீண்டும் முருங்க மரம் ஏறும் ட்ரம்ப்

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தும் முயற்சியில் அதிபர் ட்ரம்ப் ரஷ்யா மீது சிலப் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தார். அதைத் தொடர்ந்து, ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய் வியாபார லாபம்தான் உக்ரைன் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: விற்பனைக்கு வந்த பலவகை பூக்கள்; நிலக்கோட்டையில் குவியும் மக்கள்!

நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில்நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில்நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில்நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில்நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில்நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில்நி... மேலும் பார்க்க