செய்திகள் :

பாக். வீரர்களுடன் கை குலுக்காமல் மிடுக்குடன் நடைபோட்டு இந்திய வீரர்கள் சிறப்பான பதிலடி!

post image

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் இந்திய அணியினர் கை குலுக்காததற்கு என்ன காரணம்? என்பதற்கு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார்.

ஆட்டம் தொடங்குவதற்கு முன் டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் இந்திய வீரர்களை பந்துவீச பணித்தது.

இந்த நிலையில், டாஸ் சுண்டப்பட்ட பின் இரு அணி கேப்டன்களும் கிரிக்கெட் விளையாட்டின் பாரம்பரியப்படி கை குலுக்கி வாழ்த்து தெரிவித்துக்கொள்வதே வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டு கடந்து சென்றதைப் பார்க்க முடிந்தது.

அதன்பின் ஆட்டம் முடிவடைந்ததும், அதே பாணியில், இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர்.

இந்த நிலையில், ஆசிய கோப்பையில் இந்திய அணி வீரர்கள் செய்த செயல் சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியிருக்கிறது.

இது குறித்து, ஞாயிற்றுக்கிழமை(செப். 14) நள்ளிரவு ஆட்டம் நிறைவடைந்தபின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசும்போது, “நமது அரசும் பிசிசிஐ-யும் ஓரணியில் பிணைந்து செயல்படுகின்றன. நாங்கள் இங்கு விளையாடுவதற்காக மட்டுமே வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட்டேன். இதன்மூலம், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளோம்.

ஒரு விளையாட்டு வீரராக வாழ்க்கையில் ஒருசில விஷயங்களை விளையாட்டைவிட முதன்மையானதாகக் கருத வேண்டும். பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். அவர்கள் குடும்பத்துடன் நாங்கள் இருக்கிறோம். அவர்களுக்கு துணையாக நிற்கிறோம்.

நான் ஏற்கெனவே சொன்னது போல, இந்த வெற்றியை நமது துணிச்சலான படை வீரர்களுக்கு, ’ஆபரேஷன் சிந்தூரில்’ ஈடுபட்ட வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்” என்றார்.

சூர்யகுமார் யாதவின் இதே கருததியே இந்திய அணியின் பயிர்சியாளர் கௌதம் கம்பீரும் வெளிப்படுத்தியுள்ளார்.

India captain Suryakumar Yadav did not shake hands with his Pakistani counterpart

ஆசிய கோப்பையிலிருந்து விலகும் பாக்.? ஐசிசியிடம் புகார்!

இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதைத் தவிர்த்துச் சென்ற செயலைக் குறிப்பிட்டு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.இந்தியா - ... மேலும் பார்க்க

பாகிஸ்தானைப் பந்தாடிய இந்தியா! அபார வெற்றி!

ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே சேர... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: பாக். திணறல்! இந்தியா வெற்றி பெற எளிய இலக்கு!

ஆசிய கோப்பையில் இந்தியா வெற்றி பெற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.துபையில் நடைபெறும் ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான... மேலும் பார்க்க

மகளிர் கிரிக்கெட்: ஆஸி. அணியிடம் இந்தியா போராடி தோல்வி!

பஞ்சாப் மாநிலம் முல்லான்புரில் இன்று(செப். 14) நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா படுதோல்வியைச் சந்தித்தது.முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிரணி 50 ஓவர்கள் முடிவில் ஆஸ... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: பாக். எதிராக இந்தியா முதலில் பந்துவீச்சு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை (செப். 14) இரவில் மோதுகின்றன.இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டதில், பாகிஸ்தான் டாஸை வென்று முதலில் பேட... மேலும் பார்க்க

பாக். எதிராக இன்றிரவு கிரிக்கெட் ஆட்டம்: பல்வேறு தரப்பிலிருந்தும் வலுக்கும் கண்டனம்!

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி கிரிக்கெட் விளையாட பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் வலுத்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் பலர்... மேலும் பார்க்க