செய்திகள் :

ஆசிய கோப்பை: பாக். திணறல்! இந்தியா வெற்றி பெற எளிய இலக்கு!

post image

ஆசிய கோப்பையில் இந்தியா வெற்றி பெற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

துபையில் நடைபெறும் ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் இந்தியாவை பந்துவீச பணித்தது.

இந்தியாவில், பஹல்காம் தாக்குதலில் எதிர்வினையாக பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் ஆட மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தபோதிலும், மிகுந்த பரபரப்புக்கிடையே தொடங்கிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா விக்கெட் எடுத்துக் கொடுத்தார். அவரது பந்துவீச்சில் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரரான சைம் அயூப் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்த பாகிஸ்தான், முதல் 10 ஓவர்களில் 49 ரன்கள் மட்டுமே திரட்டி 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதையடுத்து, எளிய வெற்றி இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

India vs Pakistan, 6th Match India need 128 runs

பாகிஸ்தானைப் பந்தாடிய இந்தியா! அபார வெற்றி!

ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே சேர... மேலும் பார்க்க

மகளிர் கிரிக்கெட்: ஆஸி. அணியிடம் இந்தியா போராடி தோல்வி!

பஞ்சாப் மாநிலம் முல்லான்புரில் இன்று(செப். 14) நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா படுதோல்வியைச் சந்தித்தது.முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிரணி 50 ஓவர்கள் முடிவில் ஆஸ... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: பாக். எதிராக இந்தியா முதலில் பந்துவீச்சு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை (செப். 14) இரவில் மோதுகின்றன.இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டதில், பாகிஸ்தான் டாஸை வென்று முதலில் பேட... மேலும் பார்க்க

பாக். எதிராக இன்றிரவு கிரிக்கெட் ஆட்டம்: பல்வேறு தரப்பிலிருந்தும் வலுக்கும் கண்டனம்!

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி கிரிக்கெட் விளையாட பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் வலுத்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் பலர்... மேலும் பார்க்க

மூவர் அரைசதம்: இந்திய மகளிரணி 281 ரன்கள்!

இந்திய மகளிரணி 50 ஓவர்கள் முடிவில் ஆஸி. மகளிருக்கு எதிராக 281/7 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக இந்திய வீராங்கனை பிரதிகா ராவல் 64 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திர... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்! பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பரபரக்கும் கிரிக்கெட் களம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை (செப். 14) மோதுகின்றன.பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், அதற்கான பதிலடி, அதைத் தொடா்ந்து இரு நாடுகளிடையே எழுந... மேலும் பார்க்க