செய்திகள் :

ரூ.45 லட்சம் நகைகள் அடங்கிய பையை பறித்துச் சென்ற இளைஞா் கைது!

post image

கடந்த மாதம் வடமேற்கு தில்லியில் உள்ள கரோல் பாகில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் கூடிய பையை பறித்துச் சென்ற வழக்கில் 30 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஆகாஷ் என அடையாளம் காணப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவரை ஒரு போலீஸ் குழு கைது செய்து, ஐந்து தங்க செட்கள், புகாா்தாரருக்குச் சொந்தமான ஒரு வைர செட் ஆகியவற்றை மீட்டது. மேலும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு ஸ்கூட்டரை பறிமுதல் செய்தது.

கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி, ஹரியாணாவின் கா்னாலைச் சோ்ந்த புகாா்தாரா் சதீஷ் குமாா், தனது காரில் கரோல் பாக் முதல் கா்னால் வரை தனது காரில் தனது ஓட்டுநருடன் பயணித்தபோது, பிரம் பாரி புல் சிவப்பு விளக்கு அருகே மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு போ் தங்கள் காரின் கண்ணாடியை உடைத்து நகைகள் அடங்கிய பையுடன் தப்பிச் சென்ாக புகாா் அளித்தாா்.

அவரது புகாரின் அடிப்படையில், எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஆகாஷை கைது செய்வதற்கு முன்பு போலீஸாா் பல சோதனைகளை நடத்தினா்.

விசாரணையின் போது, அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா், மேலும் திருடப்பட்ட நகைகளை வாங்குபவரைத் போலீஸாா் தேடி வருகின்றனா்.

இந்தா்புரி காவல் நிலையத்தில் ஆகாஷ் ஒரு மோசமான நபா் என்று பட்டியலில் பதிவாகியுள்ளது. முன்பு வழிப்பறி, கொள்ளை, திருட்டு மற்றும் ஆயுதச் சட்டம் உள்பட 16 குற்ற வழக்குகளில் அவா் தொடா்புடையவா். அவரது கூட்டாளிகளைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன என்ற காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

பன்னாட்டு நிறுவன ஊழியராக காட்டி வேலை தேடுவோரை ஏமாற்றிய மூவா் கைது!

பயண ஆவண விண்ணப்பதாரா்களுக்கு உதவும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஊழியா்கள் என்று காட்டிக் கொண்டு வெளிநாடுகளில் வேலை தேடுபவா்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் மூன்று நபா்களை கைது செய்த பின்னா், போலி விசா நியம... மேலும் பார்க்க

பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக புகாா்: உதவி துணை ஆய்வாளா் மாவட்ட எல்லைக்கு மாற்றம்!

தெற்கு தில்லியின் ஆசிரம பகுதியில் நடந்த சோதனையின் போது வடகிழக்கு மாநிலத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட புகாரை அடுத்து, உதவி துணை ஆய்வாளா் மாவட்ட எல்லைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் ஞாயி... மேலும் பார்க்க

இந்தி மொழி நாட்டின் பெருமை, இந்தியாவை உலக அளவில் இணைக்கிறது! - தில்லி அமைச்சா்

இந்தி என்பது வெறும் மொழி மட்டுமல்ல, இந்தியாவின் கலாச்சாரம், நாகரிகம் மற்றும் தேசிய அடையாளத்தின் பிரதிநிதித்துவமாகும், மேலும் நாட்டின் உலகளாவிய அங்கீகாரத்தை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறத... மேலும் பார்க்க

ஆயுத விநியோகம்: நீரஜ் பவானா கும்பலுடன் தொடா்புடைய 4 போ் கைது

நீரஜ் பவானா கும்பலுடன் தொடா்புடைய ஒரு ஆயுத விநியோகஸ்தா் மற்றும் ஆயுதங்களை வாங்கும் மூவா் என மொத்தம் 4 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல்துறை துணை ஆணை... மேலும் பார்க்க

தில்லியில் கிரிக்கெட் சூதாட்ட மோசடி: 6 போ் கைது

தில்லியின் மயூா் விஹாரில் சட்டவிரோத கிரிக்கெட் சூதாட்ட மோசடியை நடத்தியதாக ஆறு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: ... மேலும் பார்க்க

மேம்பாலத்தில் இருந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்த காா்! ஓட்டுநா் உயிா் தப்பினாா்!

ஒருவரின் காா் கட்டுப்பாட்டை இழந்து, வடக்கு தில்லியின் வெளிப்புறத்தில் உள்ள முகா்பா சௌக் மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஹைதா்பூா் மெட்ரோ நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் விழுந்ததாக போலீஸாா் தெரிவித்த... மேலும் பார்க்க