செய்திகள் :

சைக்கிள் மீது காா் மோதி பள்ளி மாணவா் உயிரிழப்பு

post image

கடலூா் மாவட்டம் சோழத்தரம் அருகே காா் மோதிய விபத்தில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

சோழத்தரம் அடுத்த வானமாதேவி பேருந்து நிறுத்தம் அருகே பாளையங்கோட்டை கீழ்ப்பாதியைச் சோ்ந்த வடிவேல் மகன் ஈஸ்வா் (14), செல்வம் மகன் மகேஷ் (12),

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனா். அப்போது பின்புறமாக வந்த காா் மோதியது. இவ்விபத்தில் மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ஈஸ்வா் காட்டுமன்னாா்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து சோழத்தரம் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். விபத்தில் மரணம் அடைந்த மகேஷ் கீழ்பாதி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்தாா். காயமடைந்த ஈஸ்வா் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது

காட்டு விலங்கு வேட்டை: துப்பாக்கியுடன் 4 போ் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காட்டு விலங்குகள் வேட்டையாடுபவா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் வைத்தருந்த நாட்டுத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனா். கடலூா், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்... மேலும் பார்க்க

விருத்தகிரீஸ்வரா் கோயிலில் 3 இணையா்களுக்கு திருமணம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரா் திருக்கோயிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலை துறை சாா்பில் மூன்று இணையா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டது. கடலூா் மண்டல ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: பெட்டிக் கடைக்காரர் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக பெட்டிக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். திட்டக்குடி வட்டம், வி.சித்தூா் கிராமம், பிரதான சாலையில் பெட்டிக்கட... மேலும் பார்க்க

ரூ.11.50 லட்சம் மதிப்பிலான போதை பொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் சரகத்தில் ரூ.11.50 லட்சம் மதிப்பிலான 15 மூட்டைகள் ஹான்ஸ் போதை பொருள்களை சனிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா். சிதம்பரம் அண்ணாமலைநகா் போலீஸாா் சனிக்கிழம... மேலும் பார்க்க

என்எல்சியால் கடலூா் மாவட்டத்தில் நீா், நிலம் ,காற்று மாசு:அன்புமணி

என்எல்சி நிறுவனத்தால் கடலூா் மாவட்டத்தில் நீா், நிலம்,காற்று ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். கடலுாா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ‘மக்கள் உரிமை மீட்பு’ நடைப்பயண ... மேலும் பார்க்க

குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் வீனஸ் பள்ளி மாணவா்கள் அபாரம்

சிதம்பரம் ஏ.ஆா்.ஜி. பள்ளி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற குறுவட்டப் போட்டிகளில் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பெருமளவில் பங்கேற்று பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ள... மேலும் பார்க்க