பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!
காட்டு விலங்கு வேட்டை: துப்பாக்கியுடன் 4 போ் கைது
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காட்டு விலங்குகள் வேட்டையாடுபவா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் வைத்தருந்த நாட்டுத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனா்.
கடலூா், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட எல்லையோரம் காப்புக்காடு உள்ளது. இந்த காப்புக் காடுகளில் மான் உள்ளிட்ட அறியவகை வனவிலங்குகள் வாழ்கின்றன. சிலா் காப்புக்காட்டில் வாழும் மான் உள்ளிட்ட விலங்குகளை
இறைச்சிக்காக வேட்டையாடி வருவது வழக்கம். வனம் மற்றும் காவல் துறையினா் அவ்வப்போது வேட்டைக்காரா்களை கைது செய்து வருகின்றனா்.
அந்தவகையில், வேப்பூா் போலீஸாா் ரோந்து பணிக்குச் சென்றபோது, சேப்பாக்கம் கிராமம் அணைக்கரை வாய்க்கால் அருகே சந்தேகிக்கும் வகையில் வந்த காரை நிறுத்தினா். அப்போது போலீஸாரை கண்டதும் காரில் இருந்த 4 போ் தப்பியோட முயன்றனா். அவா்களை போலீஸாா் சுற்றி வளைத்துப் பிடித்தனா். காரைசோதனைசெய்ததில் நாட்டு துப்பாக்கி, சிறிய கத்திகள் இரண்டு மற்றும் பால்ரஸ் குண்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பிடிபட்டவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். அதில், சேலம் மாவட்டம், மல்லூா் வட்டம், வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்த அருள்செல்வன்(43), தமிழ்ச்செல்வம்26), கனகராஜ்(43), முருகன்(50) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனா். மேலும், காா் மற்றும் அனுமதியின்றி வேட்டைக்குப் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.