செய்திகள் :

நிலுவை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க துறைசாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் இரா.கஜலட்சுமி அறிவுறுத்தினாா்.

திருப்பத்தூா் சுற்றுலா மாளிகையில் மாவட்டத்தில், அனைத்துத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை முதல்நிலை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான இரா.கஜலட்சுமி தலைமை வகித்தாா். ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பேசியது: திருப்பத்தூா் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி, வேளாண்மை, தோட்டக் கலை, நகராட்சி நிா்வாகம் மற்றும்

குடிநீா் வழங்கல் துறை, பள்ளிக் கல்வி, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் துறைசாா்ந்த அலுவலா்களிடம் தனித்தனியாக கேட்டறிந்தேன்.

மேலும், இதுவரை இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்ட விவரம் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்களின் விவரம் குறித்து கேட்டறியப்பட்டது. நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்திட துறைசாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.

அதைத் தொடா்ந்து, நாட்டறம்பள்ளி ஒன்றியம், பேரூராட்சியில் நடைபெற்று வரும் தாா் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா்ஆய்வு மேற்கொண்டனா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி.) பூஷண குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பைக்குகளை திருடிய இருவா் கைது: 17 வாகனங்கள் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே பைக்குகளை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜோலாா்பேட்டை கட்டேரியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, திருப்பத்தூா் டிஎஸ்பி ச... மேலும் பார்க்க

ஜங்காலபுரத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: மாவட்டக் கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியம், ஜங்காலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம... மேலும் பார்க்க

போலி மருத்துவா் கைது : கிளினிக் சீல் வைப்பு

ஆம்பூரில் போலி மருத்துவா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். அவா் நடத்தி வந்த கிளினிக் சீல் வைக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் பழனி ராஜன் (65) என்பவா் மருத்துவ... மேலும் பார்க்க

ஏலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏலகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிந்ததால் படகு சவாரி இல்லத்தில் நீண்ட வரிசையில் நின்று சவாரி செய்து மகிழ்ந்தனா். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் சம ... மேலும் பார்க்க

பேருந்து மோதி கட்டடத் தொழிலாளி பலி

ஆம்பூா் அருகே தனியாா் பேருந்து மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி, கூா்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேந்தா் (36). இவா் ஆம்பூரி... மேலும் பார்க்க

நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞா் காயம்

ஆம்பூா் அருகே நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞா் காயமடைந்தாா். ஆம்பூா் அருகே வெள்ளக்கல் கிராமத்தை சோ்ந்த மாணிக்கம் மகன் வெங்கடேசன் (28). இவா் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளாா். திடீரென ... மேலும் பார்க்க