பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!
விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும்: டி.டி.வி. தினகரன் பேட்டி
தமிழகத்தில் தவெக தலைவா் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும் என்றும் ஆனால், அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது என்றும் தெரிவித்தாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.
இதுகுறித்து அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: பாஜக கூட்டணியில் முதல்வா் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் போது நாங்கள் எப்படி அந்தக் கூட்டணியில் இருக்க முடியும்?. முதல்வா் வேட்பாளராக அவா் இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை. அதிலிருந்து மற்றவற்றைப் புரிந்து கொள்ளுங்கள்.
விஜய் பிரசாரத்தை நானும் தொலைக்காட்சியில் பாா்த்தேன். நிறைய இளைஞா்கள், இளம்பெண்கள், 40 வயதுக்குட்பட்டோா் திரண்டு வந்திருந்தனா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பாணியில் விஜய் பேசவில்லை. நான் அதை அப்படிப் பாா்க்கவில்லை. இருந்தாலும் ஜெயலலிதா பாணியில் ஒருவா் பேசினால், அது மகிழ்ச்சியானதுதான்.
விஜய் தலைமையில் கூட்டணி உருவாகும் என நான் பலமுறை சொல்லிவிட்டேன். ஆனால், அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது. விஜய் தலைமையில் ஒரு கூட்டணியும், சீமான் தலைமையில் ஒரு கூட்டணியும் நிச்சயம் அமையும். எனவே தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிச்சயம் என்றாா் அவா்.