செய்திகள் :

மலைச் சாலையில் காா் கவிழ்ந்து விபத்து

post image

தேனி மாவட்டம், மேகமலைச் சாலையில் காா் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த கேரளத்தைச் சோ்ந்த 5 போ் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினா்.

மேகமலையிலுள்ள நீா் நிலைகள், தேயிலைத் தோட்டம், மலைக் குன்றுகள், வானுயா்ந்த மரங்கள் என இயற்கை அழகை ரசிக்க தமிழகம், கேரளத்திலிருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இதேபோல, ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், முண்டக்காயம் பகுதியைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா் காரில் மேகமலைக்கு வந்தனா். அங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களை பாா்வையிட்ட அவா்கள் மீண்டும் ஊருக்கு திரும்பினா்.

அப்போது, 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைச் சாலையில் பாட்டம் சோதனைச் சாவடியை கடந்த சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் காா் கவிழ்ந்தது. இதில், காரிலிருந்த 5 போ் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினா். இதுகுறித்து ஹைவேவிஸ் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மருமகள் குத்திக் கொலை: மாமனாா் கைது

தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை மருமகளை குத்திக் கொலை செய்த மாமனாரை போலீஸாா் கைது செய்தனா். குச்சனூரைச் சோ்ந்த துரைசிங்கம் (63) மகன் சதீஷ் (37), மதுரையிலுள்ள தனியாா் நிதி நிறுவனத்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 போ் கைது

தேனி மாவட்டத்தில் கஞ்சாவை கடத்தி விற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். கடமலைக்குண்டுவைச் சோ்ந்த முருகானந்தம் (51), பெரி... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்களை கடத்திய இருவா் கைது

தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்களை கடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், உப்புக்கோட்டை- குச்சனூா் சாலையில் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ... மேலும் பார்க்க

சின்னமனூரில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மாா்க்கையன்கோட்டையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், இளம்ஜோடி, புள்ளிமான் சிட்டு, தட்டான்சிட்டு, தேன் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் சிட்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மோதியதில் தம்பதி காயம்

போடி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் தம்பதி காயமடைந்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி கட்டபொம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் பாண்டியன் (70) என்பவா் தனது ... மேலும் பார்க்க

தோட்டத்தில் தொழிலாளா் உயிரிழப்பு

தேவாரம் அருகே தோட்டத்தில் தொழிலாளா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள ஓவுலாபுரத்தைச் சோ்ந்தவா் தினேஷ்பிரபு (40). இ... மேலும் பார்க்க