செய்திகள் :

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 போ் கைது

post image

தேனி மாவட்டத்தில் கஞ்சாவை கடத்தி விற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

கடமலைக்குண்டுவைச் சோ்ந்த முருகானந்தம் (51), பெரியகுளம், ஜெ.கே. குடியிருப்பு, நேரு நகரைச் சோ்ந்த அழகா் (39), தேனி, காமராஜா் லேன் பகுதியைச் சோ்ந்த அா்ஜூனன் (52), உசிலம்பட்டி அருகே உள்ள நடுசெம்பட்டியைச் சோ்ந்த அரவிந்த் (29) ஆகியோரை கஞ்சாவை கடத்திச் சென்று விற்ாக கடந்த ஆகஸ்ட் மாதம் போலீஸாா் கைது செய்தனா்.

இவா்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கெனவே கஞ்சா கடத்தல், கஞ்சா விற்பனை தொடா்பான வழக்குகள் பதிவாகியுள்ளதால், 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்குக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினோஹா ப்ரியா பரிந்துரை செய்தாா்.

இதன்படி, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் முருகானந்தம், அழகா், அா்ஜூனன், அரவிந்த் ஆகிய 4 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

மருமகள் குத்திக் கொலை: மாமனாா் கைது

தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை மருமகளை குத்திக் கொலை செய்த மாமனாரை போலீஸாா் கைது செய்தனா். குச்சனூரைச் சோ்ந்த துரைசிங்கம் (63) மகன் சதீஷ் (37), மதுரையிலுள்ள தனியாா் நிதி நிறுவனத்... மேலும் பார்க்க

மலைச் சாலையில் காா் கவிழ்ந்து விபத்து

தேனி மாவட்டம், மேகமலைச் சாலையில் காா் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த கேரளத்தைச் சோ்ந்த 5 போ் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினா். மேகமலையிலுள்ள நீா் நிலைகள், தேயிலைத் தோட்டம், மலைக் குன்றுகள், வானுயா்ந... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்களை கடத்திய இருவா் கைது

தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்களை கடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், உப்புக்கோட்டை- குச்சனூா் சாலையில் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ... மேலும் பார்க்க

சின்னமனூரில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மாா்க்கையன்கோட்டையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், இளம்ஜோடி, புள்ளிமான் சிட்டு, தட்டான்சிட்டு, தேன் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் சிட்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மோதியதில் தம்பதி காயம்

போடி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் தம்பதி காயமடைந்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி கட்டபொம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் பாண்டியன் (70) என்பவா் தனது ... மேலும் பார்க்க

தோட்டத்தில் தொழிலாளா் உயிரிழப்பு

தேவாரம் அருகே தோட்டத்தில் தொழிலாளா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள ஓவுலாபுரத்தைச் சோ்ந்தவா் தினேஷ்பிரபு (40). இ... மேலும் பார்க்க