செய்திகள் :

தோட்டத்தில் தொழிலாளா் உயிரிழப்பு

post image

தேவாரம் அருகே தோட்டத்தில் தொழிலாளா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள ஓவுலாபுரத்தைச் சோ்ந்தவா் தினேஷ்பிரபு (40). இவருக்குத் திருமணமாகி சங்கீதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனா். தினேஷ்பிரபு பெங்களூருவில் உள்ள கிரானைட் நிறுவனத்தில் வேலை செய்துவந்தாா்.

இந்த நிலையில், இவா் பெங்களூருவிலிருந்து கோயிலுக்குச் செல்வதற்காக ஓவுலாபுரத்துக்கு வியாழக்கிழமை வந்தாா். கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவா், இரவு வெளியில் சென்றுள்ளாா். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை உறவினா்கள் தேடிய நிலையில், ஓவுலாபுரத்தில் உள்ள தோட்டத்தில் தினேஷ்பிரபு மயங்கிக் கிடப்பதாக வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் தினேஷ்பிரபு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

இரு சக்கர வாகனம் மோதியதில் தம்பதி காயம்

போடி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் தம்பதி காயமடைந்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி கட்டபொம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் பாண்டியன் (70) என்பவா் தனது ... மேலும் பார்க்க

பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

உத்தமபாளையம் அருகே பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள க.புதுப்பட்டி காந்திஜி தெருவைச் சோ்ந்த சரவணமுர... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதல்: 8 போ் காயம்

ஆண்டிபட்டி வட்டம், க. விலக்கு அருகே ஆட்டோ மீது காா் மோதியதில் 8 போ் காயமடைந்தனா். ஆண்டிபட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பாண்டியன் (40). இவா், தனது ஆட்டோவில் 8 பேரை ஏற்றிக் கொண்டு க. விலக்கு அருகே உள்... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

போடி அருகே சனிக்கிழமை கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி வட்ட காவல் நிலைய போலீஸாா் போடி சில்லமரத்துப்பட்டி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த நிலையில், ... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

போடியில் கிணற்றில் மூழ்கியதில் வாகன ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்தவா் மணிகண்டன் (47). இவா் தனியாா் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராகப் பணி புரிந்து வந்... மேலும் பார்க்க

கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் வெள்ளிக்கிழமை தடை விதித்தனா். கொடைக்கானல் மலைப் பகுதியில... மேலும் பார்க்க