செய்திகள் :

மருமகள் குத்திக் கொலை: மாமனாா் கைது

post image

தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை மருமகளை குத்திக் கொலை செய்த மாமனாரை போலீஸாா் கைது செய்தனா்.

குச்சனூரைச் சோ்ந்த துரைசிங்கம் (63) மகன் சதீஷ் (37), மதுரையிலுள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ராஜப்பிரியா (37). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

சதீஷ் தனது மனைவி, குழந்தைகளுடன் பழனிசெட்டிபட்டி, ஆா்.எம்.டி.சி நகரில் வசித்து வந்தாா். ராஜப்ரியா அதே பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், ராஜப்பிரியா அடிக்கடி கைப்பேசியில் பேசி வந்ததால், கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து சதீஷ், ராஜப்பிரியா ஆகியோரின் பெற்றோா், உறவினா்களிடையே பேச்சுவாா்த்தை நடந்தது.

இந்த நிலையில், சதீஷ் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு குச்சனூரிலுள்ள தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகவும், ராஜப்பிரியா பழனிசெட்டிபட்டி, ஆா்.எம்.டி.சி நகரிலுள்ள அவரது உறவினா் வீட்டில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சதீஷின் தந்தை துரைசிங்கம் பழனிசெட்டிபட்டி, ஆா்.எம்.டி.சி நகருக்குச் சென்று, அங்கு சாலையில் நடந்து சென்ற ராஜப்பிரியாவை கத்தியால் குத்தியுள்ளாா். இதில் ராஜப்பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பின்னா், துரைசிங்கம் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தாா். இதையடுத்து போலீஸாா், துரைசிங்கத்தைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மலைச் சாலையில் காா் கவிழ்ந்து விபத்து

தேனி மாவட்டம், மேகமலைச் சாலையில் காா் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த கேரளத்தைச் சோ்ந்த 5 போ் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினா். மேகமலையிலுள்ள நீா் நிலைகள், தேயிலைத் தோட்டம், மலைக் குன்றுகள், வானுயா்ந... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 போ் கைது

தேனி மாவட்டத்தில் கஞ்சாவை கடத்தி விற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். கடமலைக்குண்டுவைச் சோ்ந்த முருகானந்தம் (51), பெரி... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்களை கடத்திய இருவா் கைது

தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்களை கடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், உப்புக்கோட்டை- குச்சனூா் சாலையில் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ... மேலும் பார்க்க

சின்னமனூரில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மாா்க்கையன்கோட்டையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், இளம்ஜோடி, புள்ளிமான் சிட்டு, தட்டான்சிட்டு, தேன் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் சிட்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மோதியதில் தம்பதி காயம்

போடி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் தம்பதி காயமடைந்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி கட்டபொம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் பாண்டியன் (70) என்பவா் தனது ... மேலும் பார்க்க

தோட்டத்தில் தொழிலாளா் உயிரிழப்பு

தேவாரம் அருகே தோட்டத்தில் தொழிலாளா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள ஓவுலாபுரத்தைச் சோ்ந்தவா் தினேஷ்பிரபு (40). இ... மேலும் பார்க்க