செய்திகள் :

முப்படை தளபதிகள் மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

post image

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

கொல்கத்தாவில் ராணுவம், விமானப்படை, கடற்படையின் மூத்த தளபதிகள் பங்கேற்கும் 16வது முப்படை தளபதிகளின் மாநாடு இன்று முதல் செப்.17 வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சௌகான், பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் இந்திய ஆயுதப் படைகளின் மூன்று தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார், ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு அவரது முதல் மாநாடு இதுவாகும்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாடு நடத்தப்படுகிறது. இன்று நடைபெற்ற மாநாட்டில் எல்லைப் பாதுகாப்பு, காஷ்மீர் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக முப்படைகளின் மூத்த தலைவர்களின் மூத்த தளபதிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்த மாநாட்டில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ஆயுதப்படைகள் சிறப்பாகப் பணியாற்றியதற்காகவும், நாட்டைக் கட்டமைப்பதில் அவர்களின் பங்களிப்புக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

Prime Minister Narendra Modi inaugurated the Tri-Services Chiefs of Staff Conference in Kolkata, West Bengal.

ஐடிஆர் இணையதளம் முடங்கியதால் பயனர்கள் அவதி!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அதிகம் பேர் ஒரேநாளில் அதற்கான ஐடிஆர் இணையதளத்தில் பதிவு செய்வதால் அத்தளம் முடங்கியுள்ளது. மாத சம்பளதாரா்கள், இதர வருவாய்ப் பிரிவினா், ஈட்டிய வ... மேலும் பார்க்க

பிரதமரின் வருகைக்கு மறுநாளே... மணிப்பூரில் குகி இனத் தலைவரின் வீடு எரிப்பு!

மணிப்பூரில் குகி இனத் தலைவரின் வீடு மர்ம நபர்களால் நள்ளிரவு தீயிட்டு எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மணிப்பூரில் குகி - மைதேயி இனக்குழுக்களிடையே ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு முதல்முறை... மேலும் பார்க்க

ஷீஷ் மஹால் வெள்ளை யானையைப் போன்றது.. முதல்வர் ரேகா குப்தா!

ஷீஷ் மஹால் பங்களா வெள்ளை யானையைப் போன்றது, அதன் தலைவிதி குறித்து தில்லி அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று முதல்வர் ரேகா குப்தா கூறினார். 2015 முதல் ஆம் ஆத்மி தில்லியில் ஆட்சி அமைத்ததிலிருந்து கடந்... மேலும் பார்க்க

அமெரிக்க வரியால் ஆந்திரத்தில் இறால் ஏற்றுமதி பாதிப்பு: ரூ.25,000 கோடி இழப்பு!

அமெரிக்க வரி விதிப்பால் ஆந்திரத்தில் இறால் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ரூ. 25,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ... மேலும் பார்க்க

பனானா ஏஐ: இணையத்தைக் கலக்கும் புடவை, 3டி, ரெட்ரோ ஸ்டைல் புகைப்படங்கள்!

கூகுளின் ஜெமினி ஏஐ புகைப்படங்கள் தற்போது இணையத்தைக் கலக்கி வருகின்றன. 'சாரி ட்ரெண்ட்' எனும் பெண்கள் சேலை அணிந்திருக்கும் புகைப்படங்கள், 3டி புகைப்படங்கள், ரெட்ரோ ஸ்டைல் என செய்யறிவு தொழில்நுட்பத்தின் ... மேலும் பார்க்க

சிசிடிவிகளை கண்காணிக்க மனித தலையீடுகளற்ற தானியங்கி கட்டுப்பாட்டு அறை!

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல்போவதைத் தடுக்கும் வகையில், மனித தலையீடுகளற்ற தானியங்கி கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. காவல் நிலையங்களில் சிசிடிவி க... மேலும் பார்க்க