செய்திகள் :

ஷீஷ் மஹால் வெள்ளை யானையைப் போன்றது.. முதல்வர் ரேகா குப்தா!

post image

ஷீஷ் மஹால் பங்களா வெள்ளை யானையைப் போன்றது, அதன் தலைவிதி குறித்து தில்லி அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று முதல்வர் ரேகா குப்தா கூறினார்.

2015 முதல் ஆம் ஆத்மி தில்லியில் ஆட்சி அமைத்ததிலிருந்து கடந்தாண்டு செப்டம்பர் முதல்வர் பதவியிலிருந்து விலகும் வரை "ஷீஷ் மஹால்" என்று பாஜகவால் முத்திரை குத்தப்பட்ட சிவில் லைன்ஸ் பகுதியில் ஃபிளாக்ஸ்டாஃப் சாலை பங்களாவில் கேஜரிவால் வசித்து வந்தார். தில்லியின் முதல்வராக இருந்தபோது அரவிந்த் கேஜரிவால் வாழ்ந்து வந்த வீட்டைப் பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தியதாகவும், அதிக விலையுயர்ந்த ஆடம்பர பொருள்கள் பயன்படுத்தியதாகவும் பாஜக குற்றம் சாட்டியது.

இதையடுத்து, பஞ்சஜன்யா நடத்திய ஆதார் இன்ஃப்ரா கன்ஃப்ளூயன்ஸ் நிகழ்ச்சியில் முதல்வர் ரேகா குப்தா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,

பங்களா கட்டுவதற்காக தில்லி மக்கள் கடினமாக உழைத்த பணத்தை ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால் வீணடித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஷீஷ் மஹால் தில்லி அரசின் வெள்ளை யானை போன்று உள்ளது. இதை என்ன செய்வது என்று நாங்கள் யோசித்து வருகிறோம். இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் தனது அறிக்கையில் 2022ல் ரூ. 33.86 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டதாக மதிப்பிட்டுள்ளார். இருப்பினும், ரூ. 75-80 கோடி செலவிடப்பட்டதாகப் பாஜக தலைவர்கள் கூறினர்.

இந்த நிலையில், ஷீஸ் மஹாலில் தில்லி மக்களின் பொது வளங்கள் வீணடிக்கப்படுவதைப் பார்ப்பது வேதனையளிக்கிறது, அதற்காகச் செலவிடப்பட்ட முழுப் பணமும் அரசு கருவூலத்திற்கு வட்டியுடன் திருப்பித் தரப்படும் என்று அவர் கூறினார்.

The "Sheesh Mahal" bungalow is like a "white elephant" and the Delhi government is yet to decide about its fate, Chief Minister Rekha Gupta said on Monday about the official residence used by Arvind Kejriwal when he was the Delhi CM.

இதையும் படிக்க: செங்கல்பட்டு உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

முப்படை தளபதிகள் மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். கொல்கத்தாவில் ராணுவம், விமானப்படை, கடற்படையின் மூத்த தளபதிகள் பங்கேற்கும் 16வது முப்படை தளபதிகளின் மா... மேலும் பார்க்க

பிரதமரின் வருகைக்கு மறுநாளே... மணிப்பூரில் குகி இனத் தலைவரின் வீடு எரிப்பு!

மணிப்பூரில் குகி இனத் தலைவரின் வீடு மர்ம நபர்களால் நள்ளிரவு தீயிட்டு எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மணிப்பூரில் குகி - மைதேயி இனக்குழுக்களிடையே ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு முதல்முறை... மேலும் பார்க்க

அமெரிக்க வரியால் ஆந்திரத்தில் இறால் ஏற்றுமதி பாதிப்பு: ரூ.25,000 கோடி இழப்பு!

அமெரிக்க வரி விதிப்பால் ஆந்திரத்தில் இறால் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ரூ. 25,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ... மேலும் பார்க்க

பனானா ஏஐ: இணையத்தைக் கலக்கும் புடவை, 3டி, ரெட்ரோ ஸ்டைல் புகைப்படங்கள்!

கூகுளின் ஜெமினி ஏஐ புகைப்படங்கள் தற்போது இணையத்தைக் கலக்கி வருகின்றன. 'சாரி ட்ரெண்ட்' எனும் பெண்கள் சேலை அணிந்திருக்கும் புகைப்படங்கள், 3டி புகைப்படங்கள், ரெட்ரோ ஸ்டைல் என செய்யறிவு தொழில்நுட்பத்தின் ... மேலும் பார்க்க

சிசிடிவிகளை கண்காணிக்க மனித தலையீடுகளற்ற தானியங்கி கட்டுப்பாட்டு அறை!

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல்போவதைத் தடுக்கும் வகையில், மனித தலையீடுகளற்ற தானியங்கி கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. காவல் நிலையங்களில் சிசிடிவி க... மேலும் பார்க்க

ஜனநாயகத்திற்கு மிகவும் நல்ல முடிவு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜூ வரவேற்பு!

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டம் மீதான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றார். நாட்டில் முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக... மேலும் பார்க்க