செய்திகள் :

பாசன நீா் பரப்புகளில் தூா்வாரும் பணி: விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு!

post image

தமிழகத்தில் பாசன நீா் பரப்புகளில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொறியாளா்களுக்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உத்தரவிட்டாா்.

அந்தத் துறையின் செயல்பாடுகள் குறித்து பொறியாளா்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, அரசால் அறிவிக்கப்பட்ட திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து மண்டல வாரியாக ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், அணை புனரமைப்புத் திட்டங்களின் முன்னேற்ற விவரங்கள் மற்றும் வெள்ளத் தணிப்புப் பணிகளின் நிலவரம் பற்றியும் ஆய்வு செய்தாா்.

பேரவையில் நீா் வளத் துறையின் சாா்பில் அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதுடன், பாசன நீா் பரப்புகளில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டுமென அமைச்சா் துரைமுருகன் உத்தரவிட்டாா்.

ஆய்வுக் கூட்டத்தில், நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா, தலைமைப் பொறியாளா் மன்மதன், சிறப்புச் செயலா் சு.ஸ்ரீதரன் உட்பட பலரும் பங்கேற்றனா்.

போராட்டத்துக்கு சென்ற அண்ணாமலை கைது!

டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்துக்கு சென்ற மாநில தலைவர் அண்ணாமலை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.சென்னை அடுத்த கானத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையை, அக்கரை அருகே த... மேலும் பார்க்க

அதிமுக தீர்மானம்: செங்கோட்டையன் ஆதரவு!

பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை சட்டப்பேரவை 9.3... மேலும் பார்க்க

திடீரென்று போராட்டம் நடத்தினால் என்ன செய்ய முடியும்? - அண்ணாமலை கேள்வி

திடீரென்று போராட்டம் நடத்தினால் என்ன செய்ய முடியும்? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டத்துக்கு செல்லும் முன் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், நானோ, பாஜக நிர்வாகிகளோ பேச... மேலும் பார்க்க

அதிமுக தீர்மானம்: பேரவையைவிட்டு வெளியேறினார் அப்பாவு!

அதிமுக தீர்மானத்தைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு அவையைவிட்டு வெளியேறினார்.சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பிச்சாண்டி தலைமையில் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாத... மேலும் பார்க்க

செங்கோட்டையனுடன் அதிமுக நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ செங்கோட்டையன் பங்கேற்காத நிலையில் அவருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 அன்று தொட... மேலும் பார்க்க

சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன் கைது

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தின் முன் தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து அதன் தலைமை அலுவலகத்தை மாா்ச் 17-இல் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எ... மேலும் பார்க்க