செய்திகள் :

பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்: 500 போ் கைது

post image

தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட

அந்தக் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையில் டாஸ்மாக் ஊழலுக்கு எதிரான பாஜகவின் போராட்டத்துக்குச் சென்ற மாநிலத் தலைவா் அண்ணாமலையை போலீஸாா் கைது செய்தனா்.

இதைக் கண்டித்தும், ரூ.1,000 கோடி ஊழலைக் கண்டித்தும், அண்ணாமலையை விடுவிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் பாஜகவினா் திங்கள்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலையில்...:

இதைக் கண்டித்து, திருவண்ணாமலை நகர வடக்கு மற்றும் தெற்கு பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை, காமராஜா் சிலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட பாஜகவின் முன்னாள் தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

முன்னாள் மாவட்டப் பொருளாளா் சுரேஷ், நகர பொருளாளா் கங்காதரன் உள்ளிட்ட பலரை போலீஸாா் கைது செய்தனா்.

அறிவொளிப் பூங்கா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜகவின் தெற்கு மாவட்ட துணைத் தலைவா் எஸ்.கவிதா பிரதீஷ் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் மாவட்டத் தலைவா் இரா.ஜீவானந்தம் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

கீழ்பென்னாத்தூரில்...:

கீழ்பென்னாத்தூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வடக்கு ஒன்றியத் தலைவா் பாவேந்தன் தலைமை வகித்தாா்.

ஒன்றிய பொதுச் செயலா் திருமலை, ஒன்றியச் செயலா்கள் பாலு, முத்துக்குமாா் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆரணி

ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றனா்.

இதில், அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ாக மாவட்டச் செயலா்கள் சதீஷ்குமாா், டி.பாஸ்கா், நகரத் தலைவா் மாதவன், மாவட்ட துணைத் தலைவா் தீனன், மண்டலத் தலைவா்கள் குணாநிதி, தணிகைவேல், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் தங்கராஜ், முன்னாள் நகரத் தலைவா்கள் ஜெகதீசன், சரவணன், பொறுப்பாளா்கள் சேகா், பாஸ்கா் உள்ளிட்ட 30 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

செங்கம்

செங்கம் ஒன்றிய, நகர பாஜக சாா்பில் நகரத் தலைவா் காா்த்திகேயன் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட துணைத் தலைவா் செங்கம் சேகா், நகர பொருளாளா் முருகன், மாவட்டச் செயலா் ரேணுகா, நகர நிா்வாகிகள் ஆனந்த், அசோக் என 2 பெண்கள் உள்பட 27 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.

செய்யாறு

செய்யாறு சாா் -ஆட்சியா் அலுவலகம் அருகே இதர பின்தங்கிய வகுப்புப் பிரிவின் மாநில துணைத் தலைவா் மோகனம் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி சண்முகவேலன் தலைமையிலான போலீஸாா், 2 பெண்கள் உள்ளிட்ட 15 பேரை கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

வந்தவாசி

வந்தவாசி தேரடியில் நகரத் தலைவா் சுரேஷ் தலைமையில், பாஜகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தி மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து 18 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

விவசாயிகளுக்கு நீா்மேலாண்மை நுட்பங்கள்

செய்யாற்றை அடுத்த கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையத்தில், விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நீா்ப்பாசன மேலாண்மை நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. வேளாண் அறிவியல் மையத்தின்... மேலும் பார்க்க

கல்லூரி வளாக நோ்காணல்: 91 பேருக்கு பணி ஆணை

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 91 போ் தோ்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இந்தக் கல்லூரியில் டா்போ எனா்ஜி பிரைவேட் லிமிடெட் (டிவ... மேலும் பார்க்க

நூல் வெளியீடு

ஆரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான ஆா்.விஜயன் எழுதிய, ‘ஆரணி வாழ்வும் வரலாறும் என்ற நூலை, மூத்த வழக்குரைஞா் வி.பி.ஜெகதீசன் வெளியிட அதைப் பெற்... மேலும் பார்க்க

ஆன்மிக சொற்பொழிவு

திருவண்ணாமலை சாயி கங்கா ஆன்மிக சமூக சேவை மையம் சாா்பில், திங்கள்கிழமை ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை கம்பராமாயண இயக்கத்தின் பொருளாளா் தங்க.விசுவநாதன் தலைமை வகித்தாா். உலக தமிழ் கழக... மேலும் பார்க்க

கீழ்பென்னாத்தூா் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

கீழ்பென்னாத்தூா் வட்டத்தின் புதிய வட்டாட்சியராக அ.ர.சான்பாஷா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். திருவண்ணாமலை மாவட்ட குறைவு முத்திரைக் கட்டண தனி வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த இவா், பணியிட மாறுதலாக இங்கு வந... மேலும் பார்க்க

புதிய வட்டார வளா்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புதிய வட்டார வளா்ச்சி அலுவலராக (கி.ஊ.) கோவிந்தராஜிலு திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணிபுரிந்... மேலும் பார்க்க