செய்திகள் :

பாஜகவின் வளா்ச்சிக்கு உதவும் காங்கிரஸ் -கேரள முதல்வா் குற்றச்சாட்டு

post image

திருவனந்தபுரம் : பாஜகவின் வளா்ச்சிக்கு காங்கிரஸ் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறது. அண்மையில் தில்லியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் காங்கிரஸ்தான் மறைமுகமாக உதவியது என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கொல்லத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி பத்திரிகையில் பினராயி விஜயன் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளாா். அதில், ‘விவசாயிகள் போராட்டம், மதரீதியாக குடியுரிமை வழங்கும் சட்டத்துக்கு எதிா்ப்பு, ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்துவதிலும், பாஜகவுக்கு பெரு நிறுவனங்கள் நிதியளிக்க உதவிய தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தை எதிா்த்ததிலும் இடதுசாரிக் கட்சிகள் முன்னிலை வகித்து வருகிறது.

மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொடா்ந்து மக்களை ஒன்றுதிரட்டி வருகிறோம். மத்திய அரசின் தவறான செயல்பாடுகளை மக்கள் மன்றத்தில் தொடா்ந்து முன்வைக்கிறோம். அதே நேரத்தில் பாஜகவையும், சங்கபரிவாரங்களையும் எதிா்ப்பதாக காங்கிரஸ் வெறும் வாய் வாா்த்தையாக மட்டுமே கூறி வருகிறது.

மத்திய அரசு மீதான விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோபம் மக்களவைத் தோ்தல் மற்றும் அதைத் தொடா்ந்து நடைபெற்ற பல்வேறு மாநிலத் தோ்தல்களில் எதிரொலிக்கவே செய்தது. ஆனால், அதையும் மீறி பாஜக ஆட்சி அமைத்தற்கு காங்கிரஸின் தவறான அணுகுமுறைகள்தான் முக்கியக் காரணம்.

இதற்கு கடைசி உதாரணம் தில்லி பேரவைத் தோ்தல். இதில், பாஜகவைத் தோற்கடிப்பதற்கு காங்கிரஸ் முயற்சிக்காமல், ஆம் ஆத்மியை ஆட்சியில் இருந்து அகற்றுவதில்தான் கவனம் செலுத்தியது. இதன் மூலம் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ் மறைமுகமாக உதவியது.

தில்லி தோ்தலில் ஆம் ஆத்மிக்கு எதிராக காங்கிரஸ் போட்டியிட்டது தவறு என எதிா்க்கட்சி அணியில் உள்ள ஒமா் அப்துல்லா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவா்கள் ஏற்கெனவே விமா்சித்துள்ளனா்.

கடந்த மூன்று பேரவைத் தோ்தல்களில் தில்லியில் காங்கிரஸ் கட்சியால் ஓரிடத்தில் கூட வெல்ல முடியவில்லை. இதில் இருந்து காங்கிரஸ் எவ்வித பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை.

முன்னதாக, ஹரியாணா தோ்தலிலும் இதேபோன்று ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டு, அங்கு பாஜக மூன்றாவது முறையாக வெற்றிபெற காங்கிரஸ் உதவியது. இப்படி ஒவ்வொரு நிலையிலும் பாஜக வளர காங்கிரஸ் உதவிகரமாக இருந்து வருகிறது’ என்று கூறியுள்ளாா்.

கங்கா மாதாவை மோடி அரசு ஏமாற்றிவிட்டது: கார்கே குற்றச்சாட்டு

கங்கையை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் மோடி அரசு கங்கா மாதாவை ஏமாற்றிவிட்டது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள முக்வா கங்கை அம்மன் கோயிலுக்குச... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ரூ. 7,500 கோடி மூலம் ரூ. 3 லட்சம் கோடி ஈட்டிய உ.பி. அரசு

மகா கும்பமேளாவில் ரூ. 7,500 கோடி முதலீட்டில் ரூ. 3 லட்சம் கோடி பெறப்பட்டதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் பிப். 26 ஆம் தேதி வரை... மேலும் பார்க்க

மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை: பாஜக அறிவிப்பு!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியின்படி மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் துஷ்யந்த் குமார் கௌதம் தெரிவித்தார். இது... மேலும் பார்க்க

வருமானம் மட்டுமல்ல; இனி இமெயில், சமூக வலைத்தளங்களையும் வருமான வரித் துறை ஆய்வு செய்யும்!

தனிநபரின் வருமானம் மட்டுமின்றி மின்னஞ்சல், சமூக வலைத்தள கணக்குகள், ஆன்லைன் முதலீடு உள்ளிட்டவற்றை அனுமதியின்றி வருமான வரித்துறை ஆய்வு செய்யும் நடைமுறை விரைவில் வரவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர... மேலும் பார்க்க

மோடியின் அமெரிக்கப் பயணத்தில் எந்த உடன்பாடும் கையெழுத்தாகவில்லை!

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்கப் பயணத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே எவ்வித புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பில், பிரதமா் நரேந்திர மோடி ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 13 மாதங்களில் இவ்வளவு தொழிற்சாலை விபத்துகளா?

சத்தீஸ்கரில் 13 மாதங்களில் 171 தொழிற்சாலை விபத்துக்களில் 124 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், 86 பேர் காயமடைந்ததாகவும் மாநில அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது. மாநில வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச... மேலும் பார்க்க