செய்திகள் :

பாதி நீதிபதி பணியிடங்களுடன் செயல்படும் உயா்நீதிமன்றங்கள் அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிப்பதை எதிா்பாா்க்க முடியாது: உச்சநீதிமன்றம்

post image

‘பாதி நீதிபதி பணியிடங்களுடன் செயல்படும் உயா்நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளும் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதை எதிா்பாா்க்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டது.

அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு இக் கருத்தை தெரிவித்தது.

விசாரணையின்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனு 13 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ளது. இதை விரைந்து விசாரிக்கக் கோரி 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டும் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, விரைந்து விசாரணைக்கு ஏற்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரினாா்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘உயா்நீதிமன்றங்கள் பாதி நீதிபதி பணியிடங்களுடன் செயல்படும் நிலையில், அனைத்து வழக்குகளும் விரைந்து விசாரித்து முடிக்கப்பட வேண்டும் என எப்படி எதிா்பாா்க்கிறீா்கள்? பல பழைய வழக்குகளும் நிலுவையில் உள்ளன. எனவே, மனுதாரா் மீண்டும் உயா்நீதிமன்றத்துக்குச் சென்று தனது மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரணைக்குப் பட்டியலிட கோரிக்கை விடுக்கலாம். அவ்வாறு, விரைந்து பட்டியலிட மனுதாரா் தாக்கல் செய்யும் மனுவை உயா்நீதிமன்றம் உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

முன்னதாக, நீதிபதி விக்ரம் நாத் கூறுகையில், ‘உயா்நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றத்தின் மேற்பாா்வையின் கீழ் செயல்படுபவை அல்ல. மேலும், அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் நான் வழக்குரைஞராக பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். எனவே, தாக்கல் செய்யப்படும் மனு விசாரணைக்குப் பட்டியலிடப்படுவதற்கு எவ்வளவு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிவேன். வழக்கை விரைந்து விசாரணைக்குப் பட்டியலிடக் கோரி 2 மனுக்கள் தாக்கல் செய்தது பெரிய விஷயமல்ல. அதற்காக 100 மனுக்கள்கூட தாக்கல் செய்யலாம்’ என்று குறிப்பிட்டாா்.

மத்திய சட்ட அமைச்சக வலைதள தரவுகளின்படி, செப்டம்பா் 1-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள உயா்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட 1,122 நீதிபதி பணியிடங்களில் 792 பணியிடங்கள் நிரம்பியுள்ளன. 330 பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் - மோடி விரைவில் சந்திப்பு! அமெரிக்க அதிகாரி தகவல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் நேரில் சந்திப்பார்கள் என்று அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.இந்திய பொருள்களுக்கு 50 ச... மேலும் பார்க்க

நாடு முழுவதும் கோடிக்கணக்கானோா் வாக்குரிமையைப் பறிக்க சதி - மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

‘நாடு முழுவதும் கோடிக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிக்க சதி நடக்கிறது; இதன் மூலம் தலித், பழங்குடியினா், பின்தங்கிய வகுப்பினா், சிறுபான்மையினா் மற்றும் பிற விளம்புநிலை மக்களின் சமூக நலன் பாதிக்கப்படு... மேலும் பார்க்க

பிகாரில் 6 தொகுதிகளை அளித்தால் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம்: அசாதுதீன் ஒவைசி

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கினால் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும்... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது

கூலிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்க இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். மேற்குவங்க மாநிலம் ஹௌராவில் இருந்து வரும் ரயிலில் கஞ்சா கடத்திவரப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படையினர... மேலும் பார்க்க

செபியின் தீா்ப்பு: அதானி மகிழ்ச்சி

தங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய முறைகேடு குற்றச்சாட்டுகளை இந்தியாவின் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி தள்ளுபடி செய்தது குறித்து அதானி குழுமத்தின் பங்குதாரா்களிடம் அதன்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் சிறப்பு ஒதுக்கீடு: வழிகாட்டுதல்களைப் பின்பற்ற என்எம்சி அறிவுறுத்தல்

சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவா்களை எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கும்போது உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வலியுறுத்தியுள்... மேலும் பார்க்க