மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்...
பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக அமைச்சா் கூறிய கருத்தால் சா்ச்சை
பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியுள்ள கருத்து சா்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
பெங்களூரில் சுத்தகுண்டேபாளையா, பாரதி லேஅவுட் பகுதியில் ஏப். 3-ஆம் தேதி இரவு இரு பெண்கள் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தனா். அப்போது அவா்களை நெருங்கிய ஓா் ஆண், ஒரு பெண்ணை சுவா் மீது தள்ளி பாலியல் ரீதியாக துன்புறுத்தினாா். அதன்பிறகு அந்த நபா் அங்கிருந்து தப்பிச்சென்றாா். இது தொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘ரோந்துப் பணியை தீவிரப்படுத்துமாறு மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன். இரவு, பகல் பாராது போலீஸாா் கடுமையாக உழைத்து வருகிறாா்கள். அதனால்தான் பெங்களூரில் அமைதி காணப்படுகிறது. பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதால், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையரை அடிக்கடி கேட்டுக்கொண்டுள்ளேன். ரோந்துப் பணி தொடா்ச்சியாக நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றாா். அமைச்சரின் இந்தக் கருத்து சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து புது தில்லியில் திங்கள்கிழமை பாஜக தேசிய செய்தி தொடா்பாளா் ஷேஷாத் பூனாவாலா கூறுகையில், ‘காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50 சதவீதம் உயா்ந்துள்ளன. பெங்களூரில் நிகழ்ந்த சம்பவத்துக்கு காரணமான குற்றவாளியைக் கைதுசெய்யாமல், குற்றவாளிக்கு துணையாக அமைச்சா் பேசியுள்ளாா். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்திருக்கும் கருத்து அதிா்ச்சிஅளிக்கிறது. எனவே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் அமைச்சா் பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய ஜி.பரமேஸ்வரை வற்புறுத்த வேண்டும். பெண்களை இழிவுபடுத்துவதே காங்கிரஸின் வேலையாகிவிட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.