செய்திகள் :

பிகாரில் வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கை: முழுவீச்சில் எதிர்ப்போம்! -முதல்வர் ஸ்டாலின்

post image

பிகாரில் வாக்காளர்களை நீக்குவதற்கான யுக்தியை தேர்தல் ஆணையம் கையாளுகிறது என்று முதல்வர் மு. க .ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிகார் மாநிலத்தில் 52 லட்சம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 7 லட்சம் போலி வாக்காளர்கள் பதிவு செய்திருப்பது தேர்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்போது தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில், இது குறித்து மு. க .ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது: ‘தேர்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம், வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக, பல ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பாஜகவுக்கு சாதகமான நடவடிக்கையாக இந்த நடவடிக்கை திசை திரும்புகிறது. இத்தகைய நடவடிக்கையானது சீர்திருத்தம் அல்லவே.

பிஹாரில் நடைபெற்ற சம்பவங்கள் இதனை வெளிகாட்டுகின்றன. தங்களுக்காக வாக்கு செலுத்திய மக்களே திரும்பவும் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என தில்லி ஆளுமை தெரிந்து வைத்துள்ளது.

உங்களால் எங்களை வீழ்த்த முடியவில்லையென்பதால், எங்கள் வாக்களர்களை நீக்கும் நடவடிக்கையை கையிலெடுத்துள்ளீர்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள்.

நமது ஜனநாயகத்துக்கு ஏதேனும் அச்சுறுத்தல் விளைவிக்கபட்டால், கடும் எதிர்வினை எதிரொலிக்கும். தமிழ்நாடு முழு பலத்துடன் தமது குரலை எழுப்பும். இந்த அநீதிக்கு எதிராக நாங்கள் ஜனநாயக சக்திகளை ஒன்றுவிடாமல் திரட்டி போராடுவோம்.

இந்த விவகாரம் வெறுமனே பிஹார் என்ற ஒரேயொரு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. நமது குடியரசின் அடித்தளம் சம்பந்தப்பட்ட ஒன்று. ஜனநாயகம் மக்களுக்கே சொந்தம். அதை அபகரிக்க முடியாது!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The Special Intensive Revision is being misused to quietly erase voters - Chief Minister of Tamil Nadu

தூத்துக்குடியில் பிரதமர் மோடி !

மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு தமிழகம் வந்தடைந்தார். தனி விமானத்தில் தூத்துக்குடி வந்திறங்கிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தவெகவினருக்கு கட்சித் தலைமைக்கழகம் முக்கிய உத்தரவு!

தவெக கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது என்று கட்சித் தலைமைக்கழம் அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து கட்சியின் பொதுச்செயல் என்.ஆனந்த் வெளியிட்டு... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி!

மாலத்தீவிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் தூத்துக்குடிக்குப் புறப்பட்டார். அவர் இன்றிரவு 8 மணியளவில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கடந்த 18 ஆம் தேதியன்று, மது... மேலும் பார்க்க

பிரபல சின்ன திரை நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நித்யா மேனன்!

பிரபல சின்ன திரை நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுள்ளனர்.விஜய் தொலைக்காட்சியில் ஆடல், பாடல் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும், நீயா நான... மேலும் பார்க்க

தமிழகத்தைப் பற்றி ஸ்டாலின் முதலில் கவலைப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் முதலில் கவலைப்பட வேண்டும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி வருகை முன்னிட்டு நெல்லை மகாராஜா நகரில் உள்ள பாஜ... மேலும் பார்க்க