செய்திகள் :

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சிக்கு செல்லும் பொன்னி தொடர் நாயகன்!

post image

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சிக்கு பொன்னி தொடர் நாயகன் சபரி செல்லவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 9வது சீசன் வரும் அக். 5 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சினிமா மற்றும் பிறதுறைகளைச் சேர்ந்த, மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள், போட்டியாளர்களாக பங்கேற்பார்கள்.

அந்த வகையில் சின்ன திரை நடிகை நக்‌ஷத்ரா, நடனக் கலைஞரும் சமையல் நிகழ்ச்சியின் பங்கேற்பாளருமான ஜன்மோனி டோலி, பாக்கியலட்சுமி தொடர் பிரபலம் நேஹா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சின்ன திரை நடிகர் புவியரசு உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஹார்ட் பீட் இணையத் தொடரில் நடிக்கும் பாடினி குமார், ரோஷன் ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பொன்னி தொடர் நாயகன் சபரியும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது. இவர் பாரதி கண்ணம்மா, வேலைக்காரன் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்து பிரபலமானவர்.

தொகுப்பாளரான இவர், யூடியூபில் பல இணையத் தொடர்களில் நடித்துள்ளார். இவர் பிக் பாஸ் வீட்டுக்கு செல்லவுள்ளதாக வெளியான தகவல், அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தாலும், தொடக்க நாள் நிகழ்ச்சியில், பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தெரியவரும்.

கடந்த சீசனை விஜய்சேதுபதி தொகுத்து வழங்கிய நிலையில், புதிய 9வது சீசனையும் விஜய்சேதுபதியே தொகுத்து வழங்கவுள்ளார்.

இதையும் படிக்க: இராமாயணம் நிறைவு: இன்று முதல் புதிய இதிகாச தொடர்!

It has been reported that Ponni series hero Sabari will be appearing on Bigg Boss 9.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பராசக்தி!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமரன், மதராஸி திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப... மேலும் பார்க்க

குக் வித் கோமாளி -6 வெற்றியாளர் ராஜூ ஜெயமோகன்!

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ராஜூ ஜெயமோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வெற்றிக் கோப்பையுடன் ரூ. 5 லட்சத்துக்கான பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. ஷபானா, உமர் லத்தீப், லட்சுமி ர... மேலும் பார்க்க

விக்ரமின் அடுத்த படம் என்ன?

நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள திரைப்படங்களின் படப்பிடிப்பு தள்ளிச்சென்றபடியே இருக்கிறது.நடிகர் விக்ரம் வீர தீர சூரன் - 2 படத்தைத் தொடர்ந்து மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார... மேலும் பார்க்க

காந்தாரா யுனிவர்ஸ் வருமா? ரிஷப் ஷெட்டி பதில்!

நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் குறித்து பேசியுள்ளார். நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.முதல் பாகம... மேலும் பார்க்க

காந்தாரா - 1 முன்பதிவு துவக்கம்!

நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா சேப்டர் - 1 திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக... மேலும் பார்க்க

இராமாயணம் நிறைவு: இன்று முதல் புதிய இதிகாச தொடர்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இராமாயணம் தொடர் 427 எபிசோடுகளுடன் கடந்த வாரம் நிறைவடைந்தது. இதிகாசத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வந்த இராமாயணம் தொடர், பல தொடர்களைப் பின்னுக்குத் தள்ளி, டிஆர்பியில... மேலும் பார்க்க