செய்திகள் :

பிகாரில் முதல்வரின் சொந்த மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயம்

post image

பிகாரில் முதல்வர் நிதீஷின் சொந்த மாவட்டத்தில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர்.

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் சொந்த மாவட்டமான நாளந்தாவில் கட்டுமானத்தில் இருந்த ரயில்வே மேம்பாலம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடிந்து விழுந்தது.

அப்போது பல தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

உடனே உள்ளூர்வாசிகள் ஹர்னாட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். நிகழ்விடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் அவர்களை மீட்டனர். இந்த சம்பவத்தில் ஆறு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

கட்டுமானத் தரம் மோசமாக இருந்ததே இடிபாடுகளுக்குக் காரணம் என்று உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.

மேற்கு வங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 பேர் பலி

கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் முறையான விசாரணைக்குப் பிறகு கண்டறியப்படும் என்று மாவட்ட மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சமீபத்தில் மோதிஹரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி, மூன்று ஆண்டுகளில் மாநிலத்தில் 27 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

At least six workers were injured, two seriously, when a portion of an under-construction railway overbridge collapsed in Bihar Chief Minister Nitish Kumar’s home district of Nalanda late on Sunday.

கரூர் கூட்ட நெரிசல்: 8 பேர் கொண்ட குழுவை அமைத்த பாஜக!

கரூர் கூட்ட நெரிசலுக்கான காரணத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் குழுவை அமைத்துள்ளதாக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

லடாக் வன்முறை: லேயில் 6-ஆவது நாளாக ஊரடங்கு நீட்டிப்பு

வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 6-ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுயில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள... மேலும் பார்க்க

காஷ்மீர்: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு 7 சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த ஏழு சுற்றுலா தலங்களை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் திங்கள்கிழமை மீண்டும் திறந்தது. முன்னதாக வெள்ளிக்கிழமை நடந்த ஒருங்கிணைந்த தலைமையகக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

மேற்கு வங்காளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 பேர் பலி

மேற்கு வங்கத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி பெண் உள்பட 3 பேரி பலியாகினர். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஷ்யாம்நகர் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு தண்டவாளத்தை ... மேலும் பார்க்க

பிகாரில் 3 அம்ரித் பாரத், 4 பயணிகள் ரயில் சேவை தொடக்கம்: அஸ்வினி வைஷ்ணவ்

பிகாரில் மூன்று அம்ரித் பாரத் ரயில்களையும், நான்கு புதிய பயணிகள் ரயில்களையும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். தர்பங்காவிலிருந்து அஜ்மீர் வரையிலான அம்ரித் ப... மேலும் பார்க்க

தசரா பேரணியை ரத்து செய்து வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிதியை விடுவிக்கவும்: பாஜக

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சியின் வருடாந்திர தசரா பேரணியை ரத்து செய்து, செலவினங்களை மராத்வாடாவில் வெள்ள நிவாரணத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிர பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாள... மேலும் பார்க்க