செய்திகள் :

காஸா போர் முடிவுக்கு வருமா? டிரம்ப் - நெதன்யாகு இன்று சந்திப்பு!

post image

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையே இன்று(திங்கள்கிழமை) சந்திப்பு நடைபெற உள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் 2 ஆண்டுகளை நெருங்குகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் நாளுக்கு நாள் காஸா நகரம் மோசமடைந்து வருகிறது. காஸாவுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் ஹமாஸ் உடனான இஸ்ரேலின் போரை நிறுத்த டிரம்ப் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தாண்டு 4 ஆவது முறையாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை இன்று வெள்ளை மாளிகையில் சந்திக்கிறார்.

அப்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் இன்றைய பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக டிரம்ப், போர் முடிவுக்கு வருவதற்கான நேரம் இது என்று சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல நெதன்யாகுவும், போர் நிறுத்தம் குறித்து ஆலோசித்து வருவதாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சமீபத்தில் கூறியிருந்தார்.

ஹமாஸ் பிடியில் உள்ள 48 பேரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இஸ்ரேல் முன்வைக்கிறது. பதிலாக, ஹமாஸ் அமைப்பினர் காஸாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் அல்லது அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டால் பொது மன்னிப்பு வழங்கப்படும், மேலும் காஸாவில் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பிற்குப் பின் முக்கியத் தகவல்கள் வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Trump to meet Netanyahu as ending Israel’s Gaza war reaches pressure point

இதையும் படிக்க | இதுவரை 66,000 பாலஸ்தீனர்கள் பலி! - காஸா சுகாதார அமைச்சகம்!

செய்யறிவைக் கற்றுக்கொள்ளுங்கள் அல்லது வெளியேறுங்கள்! - அக்சென்ச்சர் சிஇஓ

செய்யறிவுத் திறனை கற்றுக்கொள்ளுங்கள் அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறுங்கள் என அக்சென்ச்சர் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட் கூறியிருக்கிறார். அயர்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச முன்னணி ... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் தொடங்கியது துா்கா பூஜை திருவிழா! 2 லட்சம் வீரா்கள் பாதுகாப்பு!

வங்கதேசத்தில் வருடாந்திர துா்கா பூஜை திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரா்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஹிந்துக்கள் சிறுபான... மேலும் பார்க்க

கரூா் நெரிசல் பலி சம்பவம்: இலங்கை அரசு இரங்கல்!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டின் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் துறை அமைச்சா் சுந்தரலிங்கம் ப... மேலும் பார்க்க

அமெரிக்காவால் இந்திய-ரஷிய நட்புறவு பாதிக்கப்படாது! வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ்

இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை ரஷியா மதிக்கிறது. அமெரிக்காவுடனான இந்திய உறவு ரஷியா-இந்திய நட்புறவை எவ்விதத்திலும் பாதிக்காது என்று ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

இந்தியா, பிரேஸிலுடன் அமெரிக்கா நல்லுறவைப் பேண வேண்டும்! - ஹோவா்ட் லுட்னிக்

இஸ்ரேல், பிரேஸில் உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்கா நல்லுறவைப் பேண வேண்டும் என அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். இந்தியா மற்றும் பிரேஸில் மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ள ... மேலும் பார்க்க

ஐரோப்பிய நாடுகள் ரஷியாவை தாக்கினால் உரிய பதிலடி: ஐ.நா.வில் ரஷிய அமைச்சா் உறுதி

‘ஐரோப்பிய நாடுகளை ரஷியா முதலில் தாக்காது; ஆனால், ரஷியாவை அவா்கள் தாக்க முற்பட்டால் உறுதியான பதிலடி தரப்படும்’ என்று ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் ரஷியா வெளியுறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோ தெரிவித்தாா். ஐ... மேலும் பார்க்க