செய்திகள் :

இத்தாலி பிரதமர் மெலோனி சுயசரிதைக்கு பிரதமர் மோடி முன்னுரை!

post image

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதைக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார்.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதையின் இந்தியப் பதிப்புக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐ அம் ஜார்ஜியா: மை ரூட்ஸ், மை ப்ரின்ஸிபில்ஸ் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்த சுயசரிதைக்கு முன்னுரை எழுதியுள்ள பிரதமர் மோடி, ``மெலோனியின் வாழ்க்கையானது அரசியல் மற்றும் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது. இது அவரது தைரியம், நம்பிக்கை, பொது சேவை மற்றும் இத்தாலி மக்களுக்கான அவரின் அர்ப்பணிப்பு பற்றியது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ``கடந்த 11 ஆண்டுகளில், பல உலகத் தலைவர்களுடன் பயணிக்கும் மற்றும் தொடர்புகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சில நேரங்களில், அவர்களுடனான பயணங்கள் தனிப்பட்ட விஷயங்களைத் தாண்டி பெரிய விஷயங்களாகவும் அமையும்.

இந்தப் புத்தகம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், பிரதமர் மெலோனி தனது வாழ்க்கையில் பல சாதனை நிகழ்வுகளைக் கொண்டுள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் ஊக்கமளிக்கும்.

மெலோனி பொறுப்பேற்றால், அவர் எப்படி செயல்படுவார் என்று பத்திரிகைகளும் அரசியல் ஆய்வாளர்களும் சந்தேகம் கொண்டனர். இருப்பினும், அவர் தனது நாட்டுக்கு வலிமையையும் நிலைத்தன்மையையும் வழங்கியுள்ளார். உலகளாவிய நன்மையை மேம்படுத்துவதில் அவர் உறுதியாக உள்ளார்.

பிரதமர் மெலோனியின் எழுச்சி மற்றும் தலைமைப் பண்பை பாராட்டுவதற்கு நிறைய இருக்கின்றன. அவரது வாழ்க்கைக்கும், இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வணங்கப்படும் தெய்வீக பெண் ஆற்றலான நாரி சக்திக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதாக நினைக்கிறேன்.

உலக அரங்கில் தனது நாட்டை வழிநடத்துவதற்கு, அவர் உறுதியான வேர்களைக் கொண்டுள்ளார். மெலோனியின் இந்த சுயசரிதை, ஐரோப்பா மற்றும் உலகின் ஆற்றல்மிக்க துடிப்பான தலைவர்களுள் ஒருவரின் இதயம் மற்றும் மனதைப் பற்றியது’’ என்று முன்னுரையில் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இத்தாலி ஆகிய இரு நாடுகள் மட்டுமின்றி, இரு நாட்டின் பிரதமர்களான மோடி மற்றும் மெலோனி ஆகியோருக்கு இடையேயும் நீண்டகால நட்புறவு இருந்து வருகிறது.

தங்கள் இருவரின் பெயர்களையும் சேர்த்து, மெலோடி என்றும் இத்தாலி பிரதமர் மெலோனி சமூக ஊடகங்களில் விடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:கரூர் பலி: ஹேமமாலினி எம்.பி. தலைமையில் விசாரணைக் குழு

PM Narendra Modi pens foreword for Italy PM Giorgia Meloni’s memoir — My Roots, My Principles

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள முயற்சிக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதையட... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: 8 பேர் கொண்ட குழுவை அமைத்த பாஜக!

கரூர் கூட்ட நெரிசலுக்கான காரணத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் குழுவை அமைத்துள்ளதாக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

லடாக் வன்முறை: லேயில் 6-ஆவது நாளாக ஊரடங்கு நீட்டிப்பு

வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 6-ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுயில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள... மேலும் பார்க்க

காஷ்மீர்: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு 7 சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த ஏழு சுற்றுலா தலங்களை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் திங்கள்கிழமை மீண்டும் திறந்தது. முன்னதாக வெள்ளிக்கிழமை நடந்த ஒருங்கிணைந்த தலைமையகக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

பிகாரில் முதல்வரின் சொந்த மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயம்

பிகாரில் முதல்வர் நிதீஷின் சொந்த மாவட்டத்தில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர். பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் சொந்த மாவட்டமான நாளந்தாவில் கட்டுமானத்தில் இருந்த... மேலும் பார்க்க

மேற்கு வங்காளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 பேர் பலி

மேற்கு வங்கத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி பெண் உள்பட 3 பேரி பலியாகினர். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஷ்யாம்நகர் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு தண்டவாளத்தை ... மேலும் பார்க்க