செய்திகள் :

செய்யறிவைக் கற்றுக்கொள்ளுங்கள் அல்லது வெளியேறுங்கள்! - அக்சென்ச்சர் சிஇஓ

post image

செய்யறிவுத் திறனை கற்றுக்கொள்ளுங்கள் அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறுங்கள் என அக்சென்ச்சர் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட் கூறியிருக்கிறார்.

அயர்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அக்சென்ச்சர் உலகம் முழுவதும் உள்ள தன்னுடைய நிறுவனங்களில் பணியாற்றி வந்த 11,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கடந்த 3 மாதங்களில் பணிநீக்கம் செய்திருக்கிறது.

செய்யறிவுத் துறையின் அதிகவேக வளர்ச்சியினால் தகுதி இல்லாத ஊழியர்களை நீக்கியுள்ளதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் அக்சென்ச்சர் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட் இது குறித்து தெரிவிக்கையில்,

"செய்யறிவு குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பயிற்சி அளிக்க முடியாத ஊழியர்கள்தான் வெளியேற்றப்படுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் செய்யறிவுத் திறன் அவசியம். அந்த திறன்களைப் பெற சாத்தியமில்லாத நேரத்தில் அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். தற்போது வெளியேற்றப்பட்ட ஊழியர்களுக்கு செய்யறிவு பயிற்சி அளிக்க முடியாது.

நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரும் செய்யறிவைக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய வாடிக்கையாளர்களுக்கு செய்யறிவு திட்டப்பணிகளை(projects) செய்துகொடுக்க வேண்டும். அப்படி செய்ய முடியவில்லை என்றால் வெளியேறுங்கள்.

தற்போது நிறுவனத்தில் 77,000 செய்யறிவு வல்லுநர்கள் இருக்கிறார்கள். இதுவே 2023ல் 44,000 பேர்தான் இருந்தனர். வரும் நிதியாண்டில் செய்யறிவை மையப்படுத்தி கூடுதல் பணியாளர்கள் சேர்க்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | காஸா போர் முடிவுக்கு வருமா? டிரம்ப் - நெதன்யாகு இன்று சந்திப்பு!

Accenture CEO Julie Sweet has said that Learn AI or leave the company

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம்: 2 பேர் பலி, 22 பேர் படுகாயம்

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இருவர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த வாரம் பொதுமக்கள் வாழும் இடங்களில் மறைந்துள்ள பயங்கரவாதிகளைக் கொல்லும் நோக்கத்தில் பாகிஸ்தான... மேலும் பார்க்க

காஸா போர் முடிவுக்கு வருமா? டிரம்ப் - நெதன்யாகு இன்று சந்திப்பு!

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையே இன்று(திங்கள்கிழமை) சந்திப்பு நடைபெற உள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் ... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் தொடங்கியது துா்கா பூஜை திருவிழா! 2 லட்சம் வீரா்கள் பாதுகாப்பு!

வங்கதேசத்தில் வருடாந்திர துா்கா பூஜை திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரா்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஹிந்துக்கள் சிறுபான... மேலும் பார்க்க

கரூா் நெரிசல் பலி சம்பவம்: இலங்கை அரசு இரங்கல்!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டின் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் துறை அமைச்சா் சுந்தரலிங்கம் ப... மேலும் பார்க்க

அமெரிக்காவால் இந்திய-ரஷிய நட்புறவு பாதிக்கப்படாது! வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ்

இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை ரஷியா மதிக்கிறது. அமெரிக்காவுடனான இந்திய உறவு ரஷியா-இந்திய நட்புறவை எவ்விதத்திலும் பாதிக்காது என்று ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

இந்தியா, பிரேஸிலுடன் அமெரிக்கா நல்லுறவைப் பேண வேண்டும்! - ஹோவா்ட் லுட்னிக்

இஸ்ரேல், பிரேஸில் உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்கா நல்லுறவைப் பேண வேண்டும் என அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். இந்தியா மற்றும் பிரேஸில் மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ள ... மேலும் பார்க்க