செய்திகள் :

"பாகிஸ்தான் வீரர்களை வெறுக்கவில்லை; ஆனால்" - பஹல்காம் தாக்குதலில் மகனை இழந்த தந்தை சொல்வது என்ன?

post image

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி கடைசி ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

146 ரன்கள் இலக்கை நோக்கி சேஸிங்கில் இறங்கிய இந்திய அணி 20 ரன்களுக்கு அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது மீட்பர் போல இறங்கிய திலக் வர்மா 69 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்து இந்தியாவை வெற்றி பெறவைத்தார்.

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வென்ற இந்திய வீரர்கள்
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வென்ற இந்திய வீரர்கள்

ஆட்ட நாயகன் விருது திலக் வர்மாவுக்கும், தொடர் நாயகன் விருது அபிஷேக் சர்மாவுக்கும் வழங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்ற முறையில் மொஹ்சின் நக்வியின் (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மற்றும் பாகிஸ்தான் அமைச்சர்) கரங்களால் ஆசிய கோப்பை வழங்க திட்டமிடப்பட்டது.

ஆனால், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அவரின் கைகளால் கோப்பை வாங்கக் கூடாது என்று புறக்கணித்துவிட்டார்.

அதனால், அவரும் அங்கிருந்து கிளம்பிவிட்டார். கோப்பையும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த லெப்டினன்ட் வினய் நர்வாலின் தந்தை ராஜேஷ் நர்வால், இந்திய வீரர்களின் இச்செயலை ஆதரித்திருக்கிறார்.

பஹல்காமில் உயிரிழந்த லெப்டினன்ட் வினய் நர்வாலின் தந்தை ராஜேஷ் நர்வால்
பஹல்காமில் உயிரிழந்த லெப்டினன்ட் வினய் நர்வாலின் தந்தை ராஜேஷ் நர்வால்

NDTV ஊடகத்திடம் இது குறித்து பேசிய ராஜேஷ் நர்வால், "நாடுதான் முதன்மை என நம் வீரர்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவும் காட்டியிருக்கின்றனர்.

பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காததன் மூலம் ஒரு வலுவான செய்தியை அனுப்பியிருக்கின்றனர்.

இந்திய குடிமக்களோ அல்லது நம் வீரர்களோ, பாகிஸ்தான் வீரர்களையோ அல்லது விளையாட்டையோ வெறுக்கவில்லை.

ஆனால், பாகிஸ்தானை அவமதிக்கும் அந்நாட்டின் தலைவர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு ஒரு செய்தியை அனுப்புவது முக்கியம்.

அதேநேரத்தில், தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடியிருக்கக் கூடாது" என்று கூறினார்.

Chris Woaks: "நேற்றுதான் அறிமுகமானதுபோல இருக்கிறது!" - 15 வருட சர்வதேச கரியர்; கிறிஸ் வோக்ஸ் ஓய்வு

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.2011-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான தொடரின் (ODI & T20) மூலம் சர்வதேச கிரிக... மேலும் பார்க்க

Ind vs Pak: ``அவரிடமிருந்து ஆசிய கோப்பையை வாங்க மாட்டோம்'' - உறுதியாக நின்ற இந்திய அணி! - யார் அவர்?

ஆசிய கோப்பை தொடரின் 41 வருட வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 28) இறுதிப் போட்டியில் மோதின. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதைத் தொடர்ந்து, ஆசிய கிரிக்கெட் க... மேலும் பார்க்க

Ind vs Pak: "என் வாழ்வின் ஸ்பெஷல் இன்னிங்ஸ்; எல்லா இந்தியர்களுக்கும் சமர்ப்பணம்" - ஆட்ட நாயகன் திலக்

ஆசிய கோப்பை தொடரின் 41 வருட வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 28) இறுதிப் போட்டியில் மோதின. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அ... மேலும் பார்க்க

Ind vs Pak: "எந்த பவுலராக இருந்தாலும் முதல் பந்திலேயே அடிக்க நினைப்பேன்" - தொடர் நாயகன் அபிஷேக்

ஆசிய கோப்பை தொடரின் 41 வருட வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 28) இறுதிப் போட்டியில் மோதின. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அ... மேலும் பார்க்க

Ind vs Pak: "மைதானத்திலும் ஆபரேஷன் சிந்தூர்" - பாகிஸ்தானை இந்தியா வென்றதும் மோடி போட்ட 3 வரி ட்வீட்

ஆசிய கோப்பை தொடரின் 41 வருட வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 28) இறுதிப் போட்டியில் மோதின. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமா... மேலும் பார்க்க

Ind vs Pak: "இப்போதைக்கு ஏற்றுக் கொள்வது சற்று கடினம்தான்" - தோல்விக்குப் பின் பாக்., கேப்டன்

ஆசிய கோப்பை தொடரின் 41 வருட வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 28) இறுதிப் போட்டியில் மோதியது. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான்... மேலும் பார்க்க