செய்திகள் :

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 26% அதிகரிப்பு!

post image

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தி லான்செட் ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு, 1990-லிருந்து 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 1990-ல் ஒரு லட்சம் பேரில் 84.8 பேருக்கு இருந்த புற்றுநோய் பாதிப்பு, 2023-ல் 107.2 பேருக்கு அதிகரித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சைகள் இருந்தபோதிலும், இறப்புகள் 21 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், 33 ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் சீனாவில் புற்றுநோய் பாதிப்பும் இறப்பும் கணிசமாகக் குறைந்துள்ளதாக தி லான்செட் ஆய்வு கூறுகிறது. இதற்கு காரணமாக - இந்த இரு நாடுகளிலும் புகையிலை கட்டுப்பாடு, உலகளாவிய தடுப்பூசி, ஒருங்கமைக்கப்பட்ட பரிசோதனை என்று தில்லியைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணர் டாக்டர் அபிஷேக் சங்கர் கூறுகிறார்.

அதிகளவிலான புகையிலைப் பயன்பாடு, உடற்பருமன், தொற்றுகள் மற்றும் முன்கூட்டியே கண்டறியும் சோதனைகளில் தாமதம் போன்றவற்றில் இந்தியா மோசமான நிலையில் உள்ளதாகவும் அபிஷேக் தெரிவித்தார்.

எச்பிவி மற்றும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி, மேமோகிராஃபி, நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை, கொலோனோஸ்கோபி பரிசோதனை, உரிய நேரத்தில் உரிய சிகிச்சை போன்றவை போதுமானதாக இல்லை. புற்றுநோய் பாதிப்புகளைத் தடுக்கும் உத்திகளை இந்தியா வலுப்படுத்த வேண்டும்.

உலகளவில் குறிப்பிடத்தக்க நோயாக புற்றுநோய் இருந்து வருகிறது. மேலும் வரும் ஆண்டுகளிலும், குறைந்த வளங்களைக் கொண்ட நாடுகளில் புற்றுநோயின் தாக்கம் எப்படி இருக்கும் என்று வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் மதிப்பிட்டு வருகிறது.

புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தேவை என்றபோதிலும், கட்டுப்பாட்டுக் கொள்கைகள் மற்றும் செயல்படுத்துதல் குறித்து உலகளாவிய சுகாதாரத்தில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்றும், மேலும் இவற்றை சமாளிக்க பல அமைப்புகளிடம் போதுமான நிதி இல்லை என்றும் வாஷிங்டன் பல்கலை கூறுகிறது.

1990 முதல் 2023 இடையிலான காலகட்டத்தில், சீனாவில் புற்றுநோய் பாதிப்பு 19 சதவிகிதமும், அமெரிக்காவில் 20 சதவிகிதமும் குறைந்துள்ளது. மேலும், புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளும் குறைந்துள்ளன. சீனாவில் புற்றுநோய் இறப்புகள் 43 சதவிகிதமும், அமெரிக்காவில் 33 சதவிகிதமும் குறைந்துள்ளன.

2023 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 1.04 கோடி இறப்புகளில் 43 லட்சம் இறப்புகளில் நடவடிக்கை எடுத்திருக்கும் வாய்ப்புகள் இருந்ததாகவும் பல்கலை கூறியது.

2023-ல் புற்றுநோய் இறப்புகளால் அனைத்து நாடுகளின் வருமான நிலைகளும் பாதித்தன. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளைத்தவிர, அனைத்து நாடுகளின் வருமான நிலைகளில் புகையிலைதான் முன்னணி ஆபத்துக் காரணியாக இருந்தது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் பாதுகாப்பற்ற உடலுறவுதான் முன்னணி ஆபத்துக் காரணியாக இருந்தது.

இந்தியாவில் பெரும்பாலான புற்றுநோய்கள், தாமதமாகத்தான் கண்டறியப்படுகின்றன. இதனால், முன்கூட்டிய கணிப்பு மோசமாக உள்ளது.

இதையும் படிக்க:செய்யறிவைக் கற்றுக்கொள்ளுங்கள் அல்லது வெளியேறுங்கள்! - அக்சென்ச்சர் சிஇஓ

Cancer cases in India rose by 26%, deaths by 21% between 1990 & 2023: Study

நல்லாட்சிக்கான முன்மாதிரி பாஜக: பிரதமர் மோடி

நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லும் ஆட்சிக்கான முன்மாதிரியாக பாஜக உருவாகியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தில்லியில் புதிதாக கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தின் திறப்பு விழாவ... மேலும் பார்க்க

பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை கனடாவின் பயங்கரவாத அமைப்பாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இந்தியா உள்பட சர்வதேச அளவில் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் தொடர்ப... மேலும் பார்க்க

தில்லி பாஜகவின் புதிய அலுவலகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

தீன தயாள் உபாத்யாய் மார்க்கில் பாஜக தில்லி பிரிவின் புதிய அலுவலகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா, தில்லி முதல்வர் ரேகா குப்... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள முயற்சிக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதையட... மேலும் பார்க்க

இத்தாலி பிரதமர் மெலோனி சுயசரிதைக்கு பிரதமர் மோடி முன்னுரை!

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதைக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார்.இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதையின் இந்தியப் பதிப்புக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியுள்ளதாகத... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: 8 பேர் கொண்ட குழுவை அமைத்த பாஜக!

கரூர் கூட்ட நெரிசலுக்கான காரணத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் குழுவை அமைத்துள்ளதாக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க