செய்திகள் :

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.88.79ஆக நிறைவு!

post image

மும்பை: தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறுகிய வரம்பில் ஒருங்கிணைந்து 7 காசுகள் சரிந்து ரூ.88.79 ஆக முடிவடைந்தது.

உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அமெரிக்க விசா கட்டண உயர்வின் தாக்கம் இந்தியாவின் ஐடி சேவைகள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ளதாக முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்ததால், ரூபாய் மதிப்பு அதன் அனைத்து நேரக் குறைந்த நிலைக்கு சென்றதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், அக்டோபர் 1 ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி தனது கொள்கைக் கூட்டத்தின் முடிவுகள் அறிவிக்க உள்ளதையடுத்து, இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் அரசு பத்திரங்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.69 ஆக தொடங்கி, முடிவில் 7 காசுகள் சரிந்து ரூ.88.79 ஆகவும் உள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, ரூபாய் மதிப்பு அதன் குறைந்த அளவிலிருந்து மீண்டு அமெரிக்க டாலருக்கு நிகராக 4 காசுகள் உயர்ந்து ரூ.88.72 ஆக நிறைவடைந்தது.

இதையும் படிக்க: ரிசர்வ் வங்கி வட்டி விகித முடிவை முன்னிட்டு பங்குச் சந்தைகள் சரிந்து நிறைவு!

ஒய் ரக கார்களின் விநியோகத்தை தொடங்கிய டெஸ்லா இந்தியா!

புதுதில்லி: இந்த ஆண்டு ஜூலை மாதம் ஒய் ரக கார்களை அறிமுகப்படுத்திய பிறகு, அதன் விநியோகத்தை தொடங்கியுள்ளதாக டெஸ்லா இந்தியா இன்று அறிவித்துள்ளது.இரண்டு மாதங்களுக்குள் தனது 'ஒய்' மாடலின் விநியோகத்தை தொடங்... மேலும் பார்க்க

ரிசர்வ் வங்கி வட்டி விகித முடிவை முன்னிட்டு பங்குச் சந்தைகள் சரிந்து நிறைவு!

மும்பை: இந்த வார இறுதியில் ரிசர்வ் வங்கி வட்டி விகித குறித்த அறிவிப்பை முன்னிட்டும், தொடர்ச்சியாக அந்நிய நிதியானது வங்கிப் பங்குகளை விட்டு வெளியேறுவதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து ஏழாவது ந... மேலும் பார்க்க

வாரத்தின் முதல் நாள்.. உயர்வுடன் பங்குச் சந்தை தொடக்கம்

மும்பை: வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை நிஃப்டி 50 மற்றும் மும்பை பங்குச் சந்தைக குறியீடுகள் உயர்வுடன் வணிகத்தைத் தொடங்கியிருக்கின்றன.கடந்த வாரம் கடுமையான வீழ்ச்சிகளை சந்தித்து வந்த பங்குச் சந... மேலும் பார்க்க

பெங்களூரில் வீடுகளின் விற்பனை 21% அதிகரிக்கும்: ப்ராப் ஈக்விட்டி

புதுதில்லி: பெங்களூரில் வீட்டுச் சந்தை வலுவாக உள்ளதாகவும், ஜூலை முதல் செப்டம்பர் வரையான மாதங்களில் அதன் விற்பனை 21 சதவிகிதம் அதிகரித்து சுமார் 16,840 வீடுகள் விற்பனையாகும் என்றது ப்ராப் ஈக்விட்டி.ரியல... மேலும் பார்க்க

ஐபோனுக்கு போட்டியாக ஒன்பிளஸ் 15..! விலை, வெளியீடு, சிறப்பம்சங்கள் என்ன?

கேமிராவுக்கு என புகழ்ப்பெற்ற ஒன்பிளஸ் நிறுவனத்தின் 'ஒன்பிளஸ் 15’ என்ற புதிய ஸ்மார்ட்போன் ஐபோனுக்கு போட்டியாக அறிமுகமாகவிருக்கிறது. இந்தப் புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் சமூக வலைதளத்தில் பேசுபொருளை உரு... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்து: கிரிசில்

கொல்கத்தா: இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள அதித வரி நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று கிரெடிட் ரேட்டிங் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் (கிரிசில்) தனது செ... மேலும் பார்க்க