செய்திகள் :

அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்து: கிரிசில்

post image

கொல்கத்தா: இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள அதித வரி நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று கிரெடிட் ரேட்டிங் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் (கிரிசில்) தனது செப்டம்பர் மாத அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வரி விதிப்பால் இந்தியப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் முதலீடுகள் பாதிக்கும். இருப்பினும், பணவீக்கம் மற்றும் விகிதக் குறைப்புகளால் உள்நாட்டு நுகர்வு வளர்ச்சியை இது ஆதரிக்கும்.

2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஐந்து காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.8 சதவிகிதமாக உயர்ந்தது. இதுவே அதன் முந்தைய ஆண்டு இதே காலாண்டில் அது 7.4 சதவிகிதமாக இருந்தது.

இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, அதே காலகட்டத்தில் 10.8 சதவிகிதத்திலிருந்து 8.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக தெரிவித்தது. அதே வேளையில் நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கம் முந்தைய ஆண்டில் 4.6 சதவிகிதத்திலிருந்து நடப்பு நிதியாண்டில் 3.5 சதவிகிதமாகக் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தது.

இதையும் படிக்க: ஈவுத்தொகையாக ரூ.3,248 கோடி அரசுக்கு செலுத்திய என்டிபிசி!

ஈவுத்தொகையாக ரூ.3,248 கோடி அரசுக்கு செலுத்திய என்டிபிசி!

புதுதில்லி: அரசுக்கு சொந்தமான என்டிபிசி நிறுவனமானது 2024-25 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையான ரூ.3,248 கோடியை அதன் நிர்வாக மின் அமைச்சகத்திற்கு வழங்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.இதுகுறித்து நிறுவனம் மேல... மேலும் பார்க்க

வாரீ எனர்ஜிஸ் பங்குகள் 7% சரிவு!

புதுதில்லி: சூரிய சக்தி தகடுகள் இறக்குமதி மீதான வரி ஏய்ப்பு தொடர்பாக அமெரிக்க நிறுவனம் மீது விசாரணை நடத்தி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, உள்ளூர் வர்த்தகத்தில் வாரீ எனர்ஜிஸின் பங்குகள் கிட்டத்... மேலும் பார்க்க

வோடபோன் ஐடியா பங்குகள் 8% சரிவுடன் நிறைவு!

புதுதில்லி: 2016-17 வரையிலான காலகட்டத்திற்கான கூடுதல் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் கோரிக்கைகளை ரத்து செய்யக் கோரிய நிறுவனத்தின் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததை... மேலும் பார்க்க

முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

மும்பை: வங்கி வாடிக்கையாளர்களின் புகார்களை விசாரித்து விரைவாக தீர்வு காண்பதற்கான சில விதிமுறைகளை பின்பற்றாத முத்தூட் ஃபின்கார்ப் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.2.7 லட்சம் அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.88.72ஆக நிறைவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதன் வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து 4 காசுகள் உயர்ந்து ரூ.88.72 ஆக முடிவடைந்தது.இந்திய-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் திருப்புமுனை ஏற... மேலும் பார்க்க

மருந்து மிதான 100% வரி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் முதல் மருந்துகளுக்கு 100 சதவிகித வரிகளை அறிவித்ததால், முதலீட்டாளர்கள் மருந்து மற்றும் ஐடி பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்ததை தொடர்ந்து, இன்றைய வ... மேலும் பார்க்க