செய்திகள் :

2 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

post image

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்து.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

நாளை (30-09-2025), வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக, வருகின்ற 01-10-2025 அன்று, வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

செப். 29ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப். 30 முதல் செப். 04 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை..

இன்று (29-09-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை..

இன்று ( செப். 29) தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளில் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலினின் விடியோதான் பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது: இபிஎஸ்

முதல்வர் ஸ்டாலினின் விடியோதான் பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதல... மேலும் பார்க்க

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,140 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,140 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 வாரங்களாக தங்கம், வெள்... மேலும் பார்க்க

தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு சிறப்பு மின்சார ரயில்கள்

கிளாம்பாக்கத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜை (புதன்), காந்தி ஜெயந்தி (வியாழன்) விடுமுறையைத் தொடர்ந்து வார ... மேலும் பார்க்க

யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை! நிர்மலா சீதாராமன்

கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை என்று மத்திய நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.கரூர் விஜய் பிரசாரக் கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரையும், மருத்து... மேலும் பார்க்க

கரூர் பலி: ஹேமமாலினி தலைமையில் விசாரணைக் குழு

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக ஹேமமாலினி எம்.பி. தலைமையில் குழு அமைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி உத்தரவிட்டுள்ளது.கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

ஆயுத பூஜை: தென் மாவட்டங்கள் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

ஆயுத பூஜை விடுமுறையைத் தொடர்ந்து தென் மாவட்டங்கள் செல்வோருக்கு செங்கல்பட்டு காவல்துறையினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.ஆயுத பூஜை (புதன்), காந்தி ஜெயந்தி (வியாழன்) விடுமுறையைத் தொடர்ந்து வார இறு... மேலும் பார்க்க