செய்திகள் :

யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை! நிர்மலா சீதாராமன்

post image

கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை என்று மத்திய நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

கரூர் விஜய் பிரசாரக் கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

”கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கவும், சிகிச்சைப் பெறுபவர்களிடம் நலம் விசாரிக்கவும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் எங்களை அனுப்பிவைத்துள்ளார்கள். கரூர் வருவதற்கு பிரதமர் நினைத்தாலும், அவரால் வரமுடியாது சூழல் இருப்பதால் வரவில்லை. நேற்றிரவு பிரதமர் அறிவுறுத்தலை தொடர்ந்து காலையே கரூர் வந்தடைந்தோம்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் துக்கத்தை வார்த்தைகளால் கூறமுடியவில்லை. அவர்கள் பேசியதில் கலங்கினேன். பெரும்பான்மையானோர் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் பிரதமரின் ஆறுதலை தெரிவித்தேன்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க மட்டுமே வந்துள்ளோம். மத்திய அரசு தரப்பில் வழங்கப்படும் நிவாரண நிதி, உடனடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

மத்திய அரசின் பிரதிநிதியாக நாங்கள் வந்துள்ளோம். கட்சி சார்பில் யாரையும் விமர்சிப்பதற்காக, குற்றம்சாட்டுவதற்காக வரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் கூறியதை பிரதமரிடம் தெரிவிப்போம்.” என்றார்.

I don't want to blame anyone! Nirmala Sitharaman

இதையும் படிக்க : கரூர் பலி: இரவில் உடற்கூராய்வு செய்யக் கூடாதா? உண்மை என்ன?

முதல்வர் ஸ்டாலினின் விடியோதான் பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது: இபிஎஸ்

முதல்வர் ஸ்டாலினின் விடியோதான் பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதல... மேலும் பார்க்க

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,140 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,140 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 வாரங்களாக தங்கம், வெள்... மேலும் பார்க்க

தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு சிறப்பு மின்சார ரயில்கள்

கிளாம்பாக்கத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜை (புதன்), காந்தி ஜெயந்தி (வியாழன்) விடுமுறையைத் தொடர்ந்து வார ... மேலும் பார்க்க

கரூர் பலி: ஹேமமாலினி தலைமையில் விசாரணைக் குழு

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக ஹேமமாலினி எம்.பி. தலைமையில் குழு அமைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி உத்தரவிட்டுள்ளது.கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

2 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்து. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.நாளை (30-09-2025), வடக்கு அந்தம... மேலும் பார்க்க

ஆயுத பூஜை: தென் மாவட்டங்கள் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

ஆயுத பூஜை விடுமுறையைத் தொடர்ந்து தென் மாவட்டங்கள் செல்வோருக்கு செங்கல்பட்டு காவல்துறையினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.ஆயுத பூஜை (புதன்), காந்தி ஜெயந்தி (வியாழன்) விடுமுறையைத் தொடர்ந்து வார இறு... மேலும் பார்க்க