செய்திகள் :

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

post image

பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசி வாயிலாக, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின், 75 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்.17), பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும், பிரதமர் மோடிக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசி வாயிலாகத் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளதாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது 75வது பிறந்தநாளுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த நண்பர் புதினுக்கு நன்றி எனவும், உக்ரைன் மோதலுக்கு தீர்வு காண இந்தியா அனைத்து சாத்தியமான பங்களிப்புகளையும் செய்ய தயாராக இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: 140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

Russian President Vladimir Putin has wished Prime Minister Narendra Modi a happy birthday over the phone.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை(செப். 18) காலை செய்தியாளர்களுடன் பேசுகிறார். இந்தத் தகவலை காங்கிரஸ் தலைமை இன்றிரவு வெளியிட்டுள்ளது.Tomorrow 18 Sept, Special Press Briefing by the Lead... மேலும் பார்க்க

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

உத்தரப் பிரதேசத்தில், பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டின் வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகள் காவல் துறையின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பரேலியில் உள்ள பிரபல பாலிவுட் நடிகை... மேலும் பார்க்க

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

நாடு முழுவதும் இருந்து வந்த பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.மக்கள் தன் மீது கொண்டுள்ள அன்பும் நம்பிக்கையும் தனது வலிமையின் ஆதாரங்கள் எனக் குறிப்பிட்டு... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில், 12 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் இன்று (செப்.17) சரண்டைந்துள்ளனர். நாராயணப்பூர் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகளின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 12... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் கடம்ப மரக் கன்று ஒன்றை பிறந்தநாள் பரிசாக அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்.17) பாஜக ஆளும் மா... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில், வெள்ளத்தில் தனது சைக்கிள் சேதமானதற்கு அழுத 6 வயது சிறுவனுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதிய சைக்கிளை பரிசளித்துள்ளார். பஞ்சாபில் வெள்ளத... மேலும் பார்க்க