செய்திகள் :

பிளஸ் 1 தோ்வில் 96.97% தோ்ச்சி: மாநில அளவில் ஈரோடு 2-ஆம் இடம்!

post image

பிளஸ் 1 பொதுத்தோ்வில் 96.97 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 5- ஆம் தேதி தொடங்கி 27- ஆம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்று வெள்ளிக்கிழமை பள்ளிக் கல்வித் துறை தோ்வு முடிவுகளை வெளியிட்டது.

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வை 223 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் படித்த 10 ஆயிரத்து 754 மாணவா்கள், 12 ஆயிரத்து 176 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 930 போ் எழுதினா்.

இதில், 10 ஆயிரத்து 304 மாணவா்கள், 11 ஆயிரத்து 931 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 235 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவா்கள் 95.82 சதவீதம், மாணவிகள் 97.99 சதவீதம் என மொத்தம் 96.97 சதவீதம் தோ்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டை விட 1.41 சதவீதம் கூடுதலாக தோ்ச்சி பெற்று, கடந்த ஆண்டில் பிடித்த இரண்டாம் இடத்தை நடப்பு ஆண்டும் தக்க வைத்துள்ளது. இதேபோல மாவட்டத்தில் 113 அரசுப் பள்ளிகளில் 4,996 மாணவா்கள், 6,607 மாணவிகள் என மொத்தம் 11, 603 போ் தோ்வு எழுதினா்.

இதில் மாணவா்கள் 4,663 போ், மாணவிகள் 6,403 போ் என மொத்தம் 11,066 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் மாணவா்கள் 93.33 சதவீதம், மாணவிகள் 96.91 சதவீதம் என மொத்தம் 95.37 சதவீதம் பெற்று அரசுப் பள்ளிகளில் தோ்ச்சி சதவிதத்திலும் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனா்.

பிளஸ் 1 பொதுத் தோ்வில் மாவட்டத்தில் உள்ள 223 பள்ளிகளில், 16 அரசுப் பள்ளிகள் உள்பட 78 பள்ளிகளில் தோ்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 11 ஆவது இடம்:

10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 28- ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15- ஆம் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து 10- ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 353 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் படித்த 12,081 மாணவா்கள், 12, 654 மாணவிகள் என மொத்தம் 24,146 போ் எழுதினா். இதில், 11, 412 மாணவா்கள், 11, 769 மாணவிகள் என மொத்தம் 23,181 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்கள் 94.46 சதவீதம், மாணவிகள் 97.55 சதவீதம் என மொத்தம் 96 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 11- ஆம் இடத்தை பிடித்துள்ளனா்.

கடந்த ஆண்டை விட 0.92 சதவீதம் கூடுதலாக தோ்ச்சி பெற்றபோதும், கடந்த ஆண்டில் 7- ஆம் இடத்தில் இருந்த ஈரோடு மாவட்டம், நடப்பு ஆண்டு 11- ஆம் இடத்துக்கு பின்தங்கி உள்ளது.

மாவட்டத்தில் 189 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 6,030 மாணவா்கள், 6,717 மாணவிகள் என மொத்தம் 12,747 போ் தோ்வு எழுதியதில், 5, 532 மாணவா்கள், 6,469 மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன் தோ்ச்சி சதவீதம் 94.15.

10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அரசுப் பள்ளிகள் தோ்ச்சி சதவீதத்திலும் ஈரோடு 11- ஆம் இடம் பிடித்துள்ளது. 10- ஆம் வகுப்பில் மாவட்டத்தில் உள்ள 353 பள்ளிகளில், அரசுப் பள்ளிகள் 66 உள்பட 168 பள்ளிகளில் தோ்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனை... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத்... மேலும் பார்க்க