செய்திகள் :

பீகார்: ``வாக்குகளுக்காக மோடி நடனம் கூட ஆடுவார்'' - ராகுல் காந்தி பேச்சு; பாஜக கடும் எதிர்ப்பு

post image

பீகாரின் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.

இதையொட்டி, இந்தியா கூட்டணியும் தேசிய முற்போக்கு கூட்டணியும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பிரசாரத்தில் இரு கூட்டணிகளும் மாறி மாறி சாடி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

நேற்று முதல் பீகாரில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியைக் கடுமையாக சாடியுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்தி பேசியதாவது,

பீகாரில் ராகுல் காந்தி, "மோடிக்கு உங்களுடைய வாக்குகள் வேண்டும். நீங்கள் அவரை நடனமாடச் சொன்னால் கூட, உங்கள் வாக்குகளுக்காக அவர் அதை செய்வார். அந்தக் கூட்டணி உங்களுடைய வாக்குகளைத் திருடப் பார்க்கிறது. ஏனெனில், அவர்களுக்கு இந்தத் தேர்தல் நோயை நிறுத்த வேண்டும்.

அவர்கள் மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்களையும் திருடினார்கள். அதை பீகாரிலும் செய்ய முயல்வார்கள்" என்று பேசியிருந்தார்.

பாஜகவின் எதிர்ப்பு

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, "ராகுல் காந்தி லோக்கல் ரௌடி போல பேசுகிறார். ராகுல் காந்தி இந்தியாவில் இருக்கும் அனைத்து ஏழை மக்களையும், பீகாரில் பிரதமர் மோடிஜிக்கு வாக்களித்தவர்களையும் அவமானப்படுத்தி உள்ளார்.

ராகுல் காந்தி வாக்காளர்களையும், இந்தியாவின் ஜனநாயகத்தையும் இழிவுபடுத்தியுள்ளார்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தேஜஸ்வி யாதவ் - ராகுல் காந்தி
தேஜஸ்வி யாதவ் - ராகுல் காந்தி

தேஜஸ்வி யாதவ் பேச்சு

தேர்தல் பிரசாரத்தில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பேசும்போது, 'ஜனதா தளம் தலைவர் நித்திஷ் குமார் பாஜகவால் இயக்கப்படுகிறார்' என்று விமர்சித்திருந்தார். இதுவும் நிதிஷ் குமாரின் உடல்நிலையை தேஜஸ்வி யாதவ் கிண்டல் செய்வதாக சர்ச்சையாகி உள்ளது.

Delhi Blast: "அந்தக் காட்சிகள் உண்மையிலேயே இதயத்தை உடைக்கின்றன" - மு.க.ஸ்டாலின் அறிக்கை!

டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைகள் முடுக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் தேசிய புலனாய்வு ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: மும்பை, சென்னை, கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு; நிலைமையை ஆராயும் பிரதமர் மோடி!

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த சக்திவாய்ந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பிற நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல... மேலும் பார்க்க

Delhi Blast: 8 பேர் பலி; மோடி ஆய்வு; நாடு முழுவதும் பதற்றம்! | Live

தமிழகத்தில் பலப்படுத்தப்படும் பாதுகாப்புதமிழகத்தில் பாதுகாப்பு சோதனைகள்"டெல்லி பாதுகாப்பில் அலட்சியம்" - அரவிந்த் கெஜ்ரிவால் கவலைமுன்னாள் Delhi முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "ரெட் ஃபோர்ட் அருகே வெட... மேலும் பார்க்க

TN -ல் SIR -ஐ எதிர்க்கும் BJP, ஆதரித்து வழக்கு தொடுத்த ADMK | ECI EPS STALIN TVK | Imperfect Show

* SIR: "வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம்... அச்சமாக இருக்கிறது" - முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணம்* “SIR படிவங்களை அனைத்து வீடுகளுக்கும் வழங்க 8 நாட்களே போதும்” -எடப்பாடி பழனிசாமி* CAA-NRC-ஐ ஆதரித்த அ... மேலும் பார்க்க

``அதிமுக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை; கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறார்கள்" - ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் டி எம் எஸ் எஸ் பள்ளியில் காணொளி காட்சி மூலம் அன்புச் சோலை திட்டத்தை (முதியோர் பராமரிப்பு மையத்தை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் ஐ. பெரியசாமி, திண்... மேலும் பார்க்க