செய்திகள் :

பீகார்: ``வாக்குகளுக்காக மோடி நடனம் கூட ஆடுவார்'' - ராகுல் காந்தி பேச்சு; பாஜக கடும் எதிர்ப்பு

post image

பீகாரின் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.

இதையொட்டி, இந்தியா கூட்டணியும் தேசிய முற்போக்கு கூட்டணியும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பிரசாரத்தில் இரு கூட்டணிகளும் மாறி மாறி சாடி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

நேற்று முதல் பீகாரில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியைக் கடுமையாக சாடியுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்தி பேசியதாவது,

பீகாரில் ராகுல் காந்தி, "மோடிக்கு உங்களுடைய வாக்குகள் வேண்டும். நீங்கள் அவரை நடனமாடச் சொன்னால் கூட, உங்கள் வாக்குகளுக்காக அவர் அதை செய்வார். அந்தக் கூட்டணி உங்களுடைய வாக்குகளைத் திருடப் பார்க்கிறது. ஏனெனில், அவர்களுக்கு இந்தத் தேர்தல் நோயை நிறுத்த வேண்டும்.

அவர்கள் மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்களையும் திருடினார்கள். அதை பீகாரிலும் செய்ய முயல்வார்கள்" என்று பேசியிருந்தார்.

பாஜகவின் எதிர்ப்பு

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, "ராகுல் காந்தி லோக்கல் ரௌடி போல பேசுகிறார். ராகுல் காந்தி இந்தியாவில் இருக்கும் அனைத்து ஏழை மக்களையும், பீகாரில் பிரதமர் மோடிஜிக்கு வாக்களித்தவர்களையும் அவமானப்படுத்தி உள்ளார்.

ராகுல் காந்தி வாக்காளர்களையும், இந்தியாவின் ஜனநாயகத்தையும் இழிவுபடுத்தியுள்ளார்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தேஜஸ்வி யாதவ் - ராகுல் காந்தி
தேஜஸ்வி யாதவ் - ராகுல் காந்தி

தேஜஸ்வி யாதவ் பேச்சு

தேர்தல் பிரசாரத்தில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பேசும்போது, 'ஜனதா தளம் தலைவர் நித்திஷ் குமார் பாஜகவால் இயக்கப்படுகிறார்' என்று விமர்சித்திருந்தார். இதுவும் நிதிஷ் குமாரின் உடல்நிலையை தேஜஸ்வி யாதவ் கிண்டல் செய்வதாக சர்ச்சையாகி உள்ளது.

`இவர்கள் திமுக பி டீம்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ... மேலும் பார்க்க

பசும்பொன்: தேவர் நினைவிட பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்; தர்ணாவும் செய்ததால் பரபரப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பூசாரியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஶ்ரீதர் வாண்டையார்பார்வர்ட் பிளாக் கட்சி... மேலும் பார்க்க

வெற்றிகரமாக முடிந்த ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு; என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில்... கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தான், முதன்முதலாக ... மேலும் பார்க்க

SIR Row : `அதிமுக வரவேற்பதும், திமுக எதிர்ப்பதும் ஏன்?' - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் | களம் 1

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் அமைச்சர்கட்டுரையாளர்: முனைவர் வைகைச்... மேலும் பார்க்க

புதுச்சேரியை உலுக்கிய மருந்து கொள்முதல் முறைகேடு - சிக்கிய அதிகாரிகள்; சிக்கலில் ஆட்சியாளர்கள்

புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் கடந்த 2018-19 ஆண்டு கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த மாத்திரைகளை சாப்பிட்ட கர்ப்... மேலும் பார்க்க

குருபூஜை: "எடப்பாடிதான் எங்கள் எதிரி" - செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்று முத்துராமலிங்கனர் சிலைக்கு மாலை அணிவிக்க அதிமுக தொண்... மேலும் பார்க்க