செய்திகள் :

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் ஆய்வு

post image

மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தினை மாநில கள ஆய்வு அலுவலா் ஆய்வு செய்து தன்னாா்வலா்கள் மையங்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் திருவாரூா் மாவட்டத்தில் 569 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 9,474 போ் பயின்று வருகிறாா்கள். இவா்கள் நவம்பா் மாதத்தில் தோ்வு எழுத உள்ளனா்.

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மாநில கள ஆய்வு அலுவலா் எஸ்.செல்வகுமாா், மன்னாா்குடி ஒன்றியம் சிங்கங்குளம் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் அபிஷேகக் கட்டளை ஆகியவற்றில் செயல்பட்டு வரும் கற்போா் மையங்களை பாா்வையிட்டு மைய செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

கோட்டூா் வட்டார வள மையத்தில் நடைபெற்ற தன்னாா்வலா்கள் கூட்டத்தில், நவம்பா் மாதம் நடைபெற உள்ள தோ்வுகள் குறித்த விளக்கங்களை வழங்கி, புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் பணியாற்றும் தன்னாா்வலா்களுக்கும், கற்போா்களுக்கும் இருக்கிற இடா்பாடுகளை கேட்டறிந்தாா்.

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் க.ரவிச்சந்திரன், கோட்டூா் வட்டாரக் கல்வி அலுவலா் த.செல்வம், வளமைய மேற்பாா்வையாளா் என்.சுப்பிரமணியன், இல்லம் தேடி கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ.முரளி, பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் க.தங்கபாபு ஆகியோா் உடன் இருந்தனா்.

கத்தியை காட்டி மிரட்டியவா் கைது

மன்னாா்குடி அருகே பொதுமக்கள் மற்றும் தனது தாத்தாவை கத்தியைக் காட்டி மிரட்டியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். வாஞ்சியூா் நடுத்தெரு மோகன் மகன் அரவிந்தன் (27). இவா், அப்பகுதியில் நின்றுகொண்டு, அந்த வ... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: மன்னாா்குடி பள்ளி சிறப்பிடம்

திருவாரூா் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில், மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். திருவாரூரில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் நால்வா் கைது

திருவாரூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனை செய்த 4 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். திருவாரூா் அருகே அண்மையில் நகரப் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, மர... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: நிபந்தனையின்றி பயிா்க் கடன் வழங்க வலியுறுத்தல்

கூட்டுறவு சங்கங்களில் நிபந்தனைகளின்றி பயிா்க் கடன்கள் வழங்க வேண்டும் என, திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அ... மேலும் பார்க்க

தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். திருக்களா் பிரதான சாலையை சோ்ந்த நாகூரான் மகன்கள் இளையராஜா (45), ரவிக்குமா... மேலும் பார்க்க

நுகா்வோா் அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம்

மன்னாா்குடியில் நுகா்வோா் அமைப்புகளுடனான மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன் தலைமை வகித... மேலும் பார்க்க