செய்திகள் :

மகாராஷ்டிர தேர்தல்: பாஜக கூட்டணியில் தொடரும் இழுப்பறி!

post image

மகாராஷ்டிரத்தை ஆளும் மஹாயுதி கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் நீட்டித்து வருகின்றது.

இந்த பிரச்னை மீண்டும் பாஜக தலைமையிடம் சென்ற நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் அஜீத் பவாருக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடரும் இழுப்பறி

மகாராஷ்டிரத்தில் தற்போது முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக, துணை முதல்வா் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 288 இடங்களைக் கொண்ட மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 20-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் மஹாயுதி கூட்டணி மற்றும் மகா விகாஸ் அகாடி கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

எதிர்க்கட்சிகளிடையே தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக கூட்டணியில் 30 தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்ற சர்ச்சை நீடித்து வருகின்றது.

இதையும் படிக்க : கிழக்கு லடாக்கில் ராணுவத்தை பின்வாங்க தொடங்கிய இந்தியா - சீனா!

பாஜக 150 - 160 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ள நிலையில், ஷிண்டே அணி 70 -80 தொகுதிகளிலும், அஜீத் பவார் அணி 50 - 55 தொகுதிகளில் கொடுக்க முன்வந்துள்ளது. ஆனால், வலுவான முதல்வராக மீண்டும் அமர்வதற்கு 100 தொகுதிகள் வரை ஷிண்டே எதிர்பார்கிறார்.

இதனிடையே, பாஜக 99 வேட்பாளர்கள், ஷிண்டே அணி 64 வேட்பாளர்கள், அஜீத் பவார் 38 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. மூன்று கட்சிகளும் ஏற்கெனவே வெற்றி பெற்றுள்ள 210 தொகுதிகளில் எவ்வித பிரச்னையும் இல்லை. மீதமுள்ள தொகுதிகளில் 30 தொகுதிகள் வரை மூன்று கட்சிகளும் கேட்பதால் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

மும்பைக்கு இருநாள் பயணம் மேற்கொண்ட அமித் ஷா, தொகுதி பங்கீடு பிரச்னையை மாநில அளவிலேயே பேசி முடித்துக் கொள்ளும்படி கூட்டணி தலைவர்களுக்கு அறிவுறுத்தி சென்றார்.

ஆனால், பிரச்னைக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், வியாழக்கிழமை இரவு அமித் ஷாவை சந்திக்க அஜீத் பவாரும், ஃபட்னவீஸும் தில்லி புறப்பட்டுச் சென்றனர்.

உ.பி.யில் தடம்புரண்ட சரக்கு ரயில்!

உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.பஞ்சாப் மாநிலம் குரு ஹர் சஹாய் ரயில் நிலையத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் ரயில் நிலையம் நோக்கி சென்று கொ... மேலும் பார்க்க

பெங்களூரு கட்டட விபத்தில் மேலும் ஒருவரின் உடல் மீட்பு: 9 ஆக உயர்ந்த பலி!

பெங்களூரு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் மேலும் ஒருவரின் உடல் வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரூவில் கடந்த சில நாள்களாகப் பெ... மேலும் பார்க்க

கேரளத்தில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்துவருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்தில் ஐந... மேலும் பார்க்க

டானா புயல்: உயிர் பலியில்லாத வகையில் முன்னெச்சரிக்கை- மோகன் சரண் மாஜி

புவனேசுவரம்: டானா புயல் வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையை கடந்தபோது, சூறைக்காற்றுடன் கனமழை பெய்த நிலையில், இந்த புயலால் ஒருவர் கூட பலியானதாகவோ காயமடைந்ததாகவோ தகவல் இல்லை என்று... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல்: காங்கிரஸ் இன்று முக்கிய ஆலோசனை!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து தில்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. மகாராஷ்டிரத்தில் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி தோ்தல் நடைப... மேலும் பார்க்க

குல்மார்க்கில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வருத்தமளிக்கிறது: பிரியங்கா

ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க்கில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்தார்.பாராமுல்லா மாவட்டத்தில் குல்மார்க் என்ற சுற்றுலாத் தலத்தின் அருகே, ரா... மேலும் பார்க்க