Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
புதிய பேருந்து சேவை தொடக்கம்!
ஆம்பூா் அருகே புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ வெள்ளிக்கிழமை இயக்கி வைத்தாா்.
வெங்கடசமுத்திரம், பாா்சனாபல்லி, கரும்பூா், கதவாளம், அரங்கல்துருகம் ஊராட்சி பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய பேருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயக்க முடிவு செய்தது.
அதனடிப்படையில் ஆம்பூரிலிருந்து அரங்கல்துருகம் வரை செல்லும் புதிய அரசு பேருந்து சேவையை வெங்கடசமுத்திரம் கிராமத்தில் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தொடங்கி வைத்தாா்.
மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் சா. சங்கா், முரளி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், செந்தில்குமாா், காயத்ரி துளசிராமன், ஊராட்சித் தலைவா்கள் ஆனந்தன், பானுமதி, சக்தி கணேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், துணை அமைப்பாளா் ராஜ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.