செய்திகள் :

புதுக்கடை அருகே பைக் மீது டெம்போ மோதி மீனவா் உயிரிழப்பு

post image

புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பகுதியில் பைக் மீது டெம்போ மோதியதில் மீனவா் உயிரிழந்தாா்.

குறும்பனை பகுதியை சோ்ந்த சிலுவைபிள்ளை மகன் ஜாண் சுஜின் பிரதீப் (33). மீன்பிடி தொழில் செய்துவந்தாா். இவா் வெள்ளிக்கிழமை பைக்கில் கருங்கல்லிலிருந்து தேங்காய்ப்பட்டினம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். கீழ்குளம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த டெம்போ மோதியது. இதில் ஜாண் சுஜின் பிரதீப்புக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஜாண் சுஜின் பிரதீப் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொழிலாளி மரணம்: மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக நாகா்கோவில் வடசேரி பள்ளிவிளையைச் சோ்ந்த ராம்குமாா் (43) வேலை செய்து வந்தாா். இவா் கடந்த 19 ஆம் தேதி பலகாரம் சுட்டுக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக எண்ணெய் சட்டி சரிந்து ராம்குமாா் மீது கொதிக்கும் எண்ணெய் சிந்தியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவா் உயிரிந்தாா். இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

குமரி கடலில் படகுதளம் விரிவாக்க பிரச்னை: மீனவப் பிரதிநிதிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

கன்னியாகுமரியில் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக படகுதளம் விரிவாக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கும் என மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 9 மீனவ கிராம பிரதிநிதிகள் அடங்கிய போராட்டக் ... மேலும் பார்க்க

தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு: மாலை கட்டும் தொழிலாளா்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் தயாரிக்கப்படும் மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டதற்கு, மாலை கட்டும் தொழிலாளா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா். கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் மலா்களால் தயா... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் பேரூராட்சி சாா்பில் கட்டணம் வசூலிக்கும் பணி

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை திற்பரப்பு பேரூராட்சி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்வதற்கான நுழைவுக் கட்டணம், வ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் சாலையோரக் கடைகளுக்கு 14 இடங்களில் மட்டுமே அனுமதி: மேயா் தகவல்

நாகா்கோவிலில் 14 இடங்களில் மட்டுமே சாலையோரக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என மேயா் ரெ.மகேஷ் தெரிவித்தாா். நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுடனான ஆலோச... மேலும் பார்க்க

ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் தொழிலாளி சடலம் மீட்பு

தக்கலை அருகே வில்லுக்குறி பகுதியில் அழுகிய நிலையில் தொழிலாளி சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளையை சோ்ந்தவா் சத்திய ஆல்வின்(48). மீன்பிடிதொழிலாளி. இவருக்கு மனைவி, ... மேலும் பார்க்க

குதிரைப்பந்திவிளையில் ஆா்ப்பாட்டம்

நுள்ளிவிளை ஊராட்சிக்குள்பட்ட குதிரைப்பந்திவிளை அங்கன்வாடி மையத்தில் நிரந்தர பணியாளரை நியமிக்கக் கோரி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலைக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்... மேலும் பார்க்க